கழிவறையில் முதியவரை பூட்டி வைத்துவிட்டு, தங்கநகைகளை திருடிக் கொண்டு தப்பியோட்டம்.
பெங்களூர், பானஷங்கரி 3-வது தெருவில் உள்ள விவேகானந்தர் தெருவில் வசித்து வருபவர் சுப்பிரமணியநாயுடு (69). இவர் அவரது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வந்த ஒரு தம்பதியினர், தாங்கள் சிவசங்கர் மற்றும் நேகா என்றும், வாடகை வீடு தேடி வந்ததாகவும் அவரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அந்த பெரியவர் அவர்களுக்கு வாடகை மற்றும் டெபாசிட் குறித்து குறிப்பிட்டார். அப்போது கழிவறைக்கு சென்ற அந்த முதியவரை உள்ளே வைத்து பூட்டி விட்டு, அவரது வீட்டில் இருந்த 360 கிராம் தங்க நகைகள், வாட்ச், போன் மற்றும் டெபிட் கார்ட் என 15 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
சில நிமிடங்கள் கழித்து, முதியவர் கழிவறையில் இருந்து சத்தமிட்டதும் அக்கம் பக்கத்தினர் வந்து கதவை திறந்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அந்த தம்பதியினரை தேடி வருகின்றனர்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…