பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதிய டெல்லி முதல்வர்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிற நிலையில், தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. மேலும், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில், ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்ந்து நீடித்து வந்த நிலையில், நேற்று, டெல்லிக்கு 730 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் நரேந்திராமோடிக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், “நேற்று 730 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை வழங்கியதற்காக டெல்லி மக்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தினமும் அதே அளவு ஆக்ஸிஜனை டெல்லிக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என எழுதியுள்ளார்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…