9 முறை பிளாஸ்மா தானம் செய்து 18 நோயாளிகளுக்கு உதவிய மருத்துவர்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக கழுவி வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தினசரி இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ள நிலையில், இந்த வைரஸால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளது.
இந்நிலையில், பெங்களூரில் மணிப்பால் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ஸ்ரீகாந்த் கடந்த ஆண்டு கொரோனாவில் இருந்து மீண்டு 3 முதல் 4 வாரங்களுக்கு ஒரு முறை தனது பிளாஸ்மாவை தானம் செய்து வருகிறார். இவர் தனது பிளாஸ்மாவை தானம் செய்வதற்கு முன் ஸ்பைக் புரத ஆண்டிபாடி பரிசோதனை செய்து கொள்கிறார்.
இதுவரை புரத அளவு தேவையான அளவைவிட குறைவாக இருந்ததில்லை அதைவிட அதிகமாக தான் காணப் படுவதாகக் கூறியுள்ளார். 3 முதல் 4 வாரங்களுக்கு ஒரு முறை பிளாஸ்மாவை நன்கொடையாக வழங்கும் இவர், இதுவரையில் 9 முறை அவ்வாறு பிளாஸ்மா நன்கொடை அளித்துள்ளார். இதன் மூலம் 18 நோயாளிகளுக்கு அவர் உதவியுள்ளார் என கூறப்படுகிறது.
நன் கொடையாக அளிக்கப்பட்ட பிளாஸ்மாவின் ஒரு அலகு 200 மில்லி லிட்டர் என்றும் இதனை இரண்டு நோயாளிகள் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…