சேர்ந்து வாழ அழைத்த கள்ளக்காதலி – மயக்க ஊசி போட்டு கொலை செய்த மருத்துவர்!

Published by
Rebekal

சேர்ந்து வாழ அழைத்த கள்ளக்காதலியை, மயக்க ஊசி போட்டு கொலை செய்த மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத் எனும் நகரில் வசிக்கும் நான்கு குழந்தைகளுக்கு தாய் தான் 33 வயதுடைய பெண். இந்தப் பெண்ணுக்கும் அப்பகுதியில் கிளினிக் வைத்து நடத்தி வரக்கூடிய இஸ்மாயில் எனும் மருத்துவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது . ஆனால், மருத்துவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி குழந்தைகளும் இருக்கிறது.

ஏற்கனவே, வேறு ஒரு குடும்பம் உள்ளதால் இப்பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் மட்டுமே வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், இந்தப் பெண் மருத்துவரிடம் ஒன்றாக வாசிக்கலாம் என அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார், எனவே இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணை கொலை செய்ய முடிவு செய்து இஸ்மாயில் அவரை சண்டிகருக்கு காரில் அழைத்துச் சென்று ஹோட்டலில் ரூம் போட்டு தங்கி, அவளுடன் சந்தோஷமாக இருந்து விட்டு, அதன் பின் பெண்ணிற்கு மயக்க ஊசி போட்டு டவலால் மூச்சடைத்து கொலை செய்துள்ளார். பின் கொலை செய்யப்பட்ட பெண்ணை குருசேத்திர பகுதியில் வீசி விட்டு மருத்துவர் வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில், தனது மனைவியை காணவில்லை என அவரது கணவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் அப்பெண்ணின் செல்போனை ஆய்வு செய்து பார்த்ததில் இஸ்மாயிலுக்கு அப்பெண்ணுக்குமான தொடர்பை கண்டறிந்துள்ளனர். அதன்பின் இஸ்மாயில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…

5 hours ago

2 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சிராஜ் அசத்தல்! இங்கிலாந்து அணி கதறல்!

லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…

5 hours ago

இயக்குநர் பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…

6 hours ago

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…

7 hours ago

புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை.! நடந்தது என்ன.?

உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

7 hours ago

பாலியல் வன்கொடுமை.., பொதுவெளியில் தண்டனை அளித்த ஈரான் அரசு.!

புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…

7 hours ago