டெல்லியில் கொரோனா பணியில் இருந்த மருத்துவர்.! 175 நாட்களுக்கு பிறகு தன்னுடைய வீட்டிற்கு சென்றுள்ளார்.!

Published by
Ragi

டெல்லியில் கொரோனா பணியில் இருந்த மருத்துவர் தன்னுடைய வீட்டிற்கு 175 நாட்களுக்கு பிறகு சென்றுள்ளார்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் டாக்டர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆகிய முன்கள பணியாளர்களாக திகழ்பவர்கள் அனைவரும் தங்கள் உயிரையும் பணயம் வைத்து மக்களின் பாதுகாப்பிற்காக இரவு, பகல் பாராமல் செயல்பட்டு வருகின்றனர். அதிலும் மருத்துவர்களின் பணி என்பது மிகப் பெரும் சவாலாகவே உள்ளது. இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்காக டெல்லி மருத்துவமனையில் பணியாற்றி வந்த அஜித் ஜெய்ன் என்பவர் 6 மாதங்கள் கழித்து தன் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அவர் பணியாற்றும் மருத்துவமனையில் இருந்து 13 கி. மீ தொலைவில் தான் அவரது வீடு உள்ளதாம். மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு செல்ல வெறும் 30 நிமிடங்கள் மட்டும் தான் ஆகுமாம். ஆனால் அஜித் தனது தொடர் வேலை மற்றும் வீட்டில் உள்ளவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடந்த மார்ச் 17ஆம் தேதி முதல் வீட்டிற்கு செல்லவில்லையாம். இந்நிலையில் தற்போது 175 நாட்களுக்கு பின்னர் வீட்டில் சென்ற அஜித் ஜெய்னை அவரது மகள்கள் கட்டி அணைத்ததுடன் அவரது மனைவி அஜித் ஜெய்னை ஆரத்தி எடுத்து வரவேற்றுள்ளார். இதுகுறித்து மருத்துவர் அஜித் ஜெய்ன் கூறிய போது, மருத்துவமனைகளில் அதிக பணிகள் இருந்ததால் வீட்டில் உள்ளவர்களிடம் இரவு 1 மணிக்கு மேல் போனில் பேசுவேன் என்றும், எனது பெற்றோருக்கு 72 வயதுக்கு மேல் என்பதால் அவர்களின் உடல்நிலையையும் கருத்தில் கொண்டு வீட்டிற்கு வரவில்லை என்றும், வீட்டை விட உயிர்களை காப்பாற்றுவது தான் முதல் பணி என்றும், டெல்லி அரசு மருத்துவர்கள் தங்குவதற்கு தனி இடவசதி ஒதுக்கிய போதிலும் பல நாட்கள் தொடர் வேலை காரணமாக மருத்துவமனையில் தங்க வேண்டியதாக இருந்தது என்றும் அஜித் ஜெய்ன் கூறியுள்ளார்.

Published by
Ragi

Recent Posts

ஆபாச வசனங்கள் அதிகம்…ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்திய “ஸ்க்விட் கேம் 3”! விமர்சனம் இதோ!

ஆபாச வசனங்கள் அதிகம்…ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்திய “ஸ்க்விட் கேம் 3”! விமர்சனம் இதோ!

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…

2 hours ago

வடசென்னை பாணியில் சிம்புவை வைத்து படம்…”ஒரு ரூபாய் கூட தனுஷ் வாங்கல”! வெற்றிமாறன் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால்  நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…

3 hours ago

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…

4 hours ago

“லாக்கப் மரணங்கள் நீடிப்பது கவலை அளிக்கிறது”…திருமாவளவன் வேதனை!

சென்னை :  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

5 hours ago

மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர்…பேருந்தில் இவ்வளவு சிறப்பம்சங்களா?

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…

5 hours ago

விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வி…உண்மையை உடைத்த மருத்துவர்!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…

7 hours ago