கொரோனா தொற்றால் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்திற்கு 2 வருடம் சம்பளம் வழங்கப்படும் என பஜாஜ் ஆட்டோ அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் இந்தியாவை பொருத்தவரையில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் காட்டு தீ போல் பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல மாநிலங்களில் பொதுமுடக்கம் அமல்ப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,கொரோனாவால் உயிரிழந்த மக்களுக்கு சில நிறுவனங்கள் அவர்களது குடும்பத்தினருக்கும் ஆதரவளிக்கும் வகையில், பல உதவிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பஜாஜ் ஆட்டோ 3 மற்றும் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்கள்கொரோனா உயிரிழந்திருந்தால், அவர்களது குடும்பங்களுக்கு இரண்டு வருடங்களுக்கு தொடர்ந்து சம்பளம் வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் ஊழியர்கள் குடும்பத்தின் குழந்தைகளின் கல்வி பொறுப்பையும் அவர்களை ஏற்றுக் கொள்வதாகவும், நிறுவனம் வழங்கும் மருத்துவ காப்பீடு இறந்தவர்களின் குடும்பத்திற்கு 5 ஆண்டுகள் நீட்டிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…