3-வதும் பெண்குழந்தை என்பதால் மனைவியின் வயிற்றை கத்தியால் அறுத்து கருவை கலைத்த கணவன்..!

Published by
Sharmi

தனக்கு பிறக்கவிருக்கும் 3 ஆவது குழந்தையும் பெண்குழந்தை என்று தெரிந்த காரணத்தால் வீட்டில் வைத்து தனது மனைவியின் வயிற்றை அறுத்து கருவை கலைத்துள்ள கணவன். 

கர்நாடக மாநிலத்தில் விஜயாபுரா பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த தம்பதி அரவிந்த், விஜயலட்சுமி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் விஜயலட்சுமி மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார். அரவிந்த் தனக்கு ஆண் குழந்தை பிறக்கபோகவதாக உறவினர்களிடம் தெரிவித்து வந்துள்ளார். அதன் பிறகு, வயிற்றில் என்ன குழந்தை வளர்கிறது என்பதை தெரிந்து கொள்ள ஸ்கேன் சென்டருக்கு மனைவியை அழைத்து சென்றுள்ளார்.

அங்கு மனைவியின் வயிற்றில் வளர்வது பெண் குழந்தை என்று தெரிவித்தவுடன் அரவிந்த் மனமுடைந்துள்ளார். மூன்றாவதும் பெண் குழந்தை என்பதால் அந்த குழந்தையை கலைக்குமாறு மனைவியிடம் தெரிவித்துள்ளார். ஆனால் மனைவி மறுத்துவிட்டார். இதன் காரணத்தால், 2 நபர்களை அழைத்து வந்து வீட்டில் இருக்கும் தனது மனைவியின் கருவை கலைக்க முற்பட்டுள்ளார். இதனை எதிர்த்த விஜயலட்சுமியின் வயிற்றை அரவிந்த் மற்றும் 2 நபர்கள் சேர்ந்து கத்தியால் அறுத்து கருவை கலைத்துள்ளனர்.

கத்தியால் கிழித்ததால் விஜயலட்சுமிக்கு ரத்தம் வெளியேற ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்து மூவரும் அவ்விடம் விட்டு தப்பி சென்றுள்ளனர். விஜயலட்சுமியின் உயிர் ஊசலாடி கொண்டிருக்க, அக்கம் பக்கத்தினர் இவரை விரைவாக தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த சம்பவம் குறித்த விசாரணையில் விஜயாபுரா புறநகர் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

அரவிந்த் மற்றும் உடன் இருந்த இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர். இந்நிலையில், குழந்தை பிறப்பதற்கு முன்பே எந்த குழந்தை என்பதை கூறுவது சட்டவிரோத செயல் அதன்படி, ஸ்கேன் சென்டரில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Published by
Sharmi

Recent Posts

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…

2 hours ago

“தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி” – புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.!

சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…

2 hours ago

முதலாம் ஆண்டு நினைவு தினம்: ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் முழு உருவ சிலை திறப்பு.!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…

3 hours ago

குரோஷியாவில் நடைபெற்ற ரேபிட் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ்.!

ஐரோப்பா :  உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…

3 hours ago

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

3 hours ago

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…

4 hours ago