என்கவுண்டர் விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது..! காவல் ஆணையர் சஜ்ஜனார் விளக்கம்..!

Published by
murugan
  • என்கவுண்டர் சம்பவம் காலை 05.45 மணி முதல்  06.15-க்குள் நடந்ததாக கூறினர்.பெண் மருத்துவர் பிரியங்கா செல்போன் உள்ளிட்ட பொருள்களை வைத்திருப்பதாகக் கூறி அதை எடுக்க அழைத்து வந்தோம்.
  • அப்போது போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்றபோது என்கவுண்டர் செய்யப்பட்டது.
  • குற்றாவளிகள் நான்கு பேரை என்கவுண்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது என சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த 27-ம் தேதி கால்நடை மருத்துவர் பிரியங்கா பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.இந்த சம்பவம் நாடு பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக  முகமது   , ஜொள்ளு சிவா , நவீன் , சென்ன கேசவலு ஆகிய  நான்கு பேரையும் போலீசார் 24 மணி நேரத்தில் கண்டுபிடித்து கைது செய்தனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை  குற்றவாளி  நான்கு பேரையும் போலீசார் அழைத்து சென்றபோது போலீசாரிடம் இருந்த துப்பாக்கியை பறித்து தப்பி செல்ல முயன்று உள்ளனர்.இதனால் போலீசார் தற்காப்புக்காக  நான்கு பேரையும் போலீசார்  என்கவுண்டர் செய்தனர்.

இந்த என்கவுண்டர் சம்பவம் குறித்து காவல் ஆணையர் சஜ்ஜனார் விளக்கம் அளித்தார்.அதில் என்கவுண்டர் சம்பவம் காலை 05.45 மணி முதல்  06.15-க்குள் நடந்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டு உள்ளது. பெண் மருத்துவர் பிரியங்கா செல்போன் உள்ளிட்ட பொருள்களை வைத்திருப்பதாகக் கூறி அதை எடுக்க அழைத்து வந்தோம்.அப்போது  4 பேரையும் அழைத்து சென்றபோது 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்காக சென்றிருந்தனர்.

சென்ன கேசவலு , முகமது ஆகியோர் எங்களுடைய  துப்பாக்கி எடுத்து மிரட்டினர். மீதமுள்ள இரண்டு குற்றவாளிகளும் கற்களைக் கொண்டு எங்களை தாக்கினர்.  குற்றவாளிகள்  நான்கு பேர்  தாக்கியபோது கூட போலீஸ் அமைதியாக இருந்து சரணடைய வேண்டும் என கூறினார்.

குற்றாவளிகள் நான்கு பேரை என்கவுண்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது என சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் கூறியுள்ளார்.

 

Published by
murugan

Recent Posts

நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய விசாரணை.! போலீஸிடம் அளித்த வாக்குமூலங்கள் என்ன?

நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய விசாரணை.! போலீஸிடம் அளித்த வாக்குமூலங்கள் என்ன?

சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…

41 minutes ago

மெக்சிகோவில் மத கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி.!

குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…

1 hour ago

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…

2 hours ago

வெளுத்து வாங்கும் கனமழை.., வால்பாறை பள்ளிகளுக்கு விடுமுறை.!

கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…

2 hours ago

இன்று மாலை ISS-க்குள் நுழைகிறது ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம்.! அப்போது என்ன நடக்கும்?

அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…

2 hours ago

இஸ்ரேலும் ஈரானும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறாங்க! டொனால்ட் டிரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட  இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…

12 hours ago