Categories: இந்தியா

பெண் தோழியை காக்பிட்டுக்குள் அழைத்துவந்த விமானி..! ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம்..!

Published by
செந்தில்குமார்

பெண் தோழியை விமானத்தின் காக்பிட்டுக்குள் அழைத்துவந்த விவாகரத்தில் ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

விமானி ஒருவர் தனது பெண் நண்பரை டிஜிசிஏ விதிகளை மீறி, அனுமதியில்லாமல் விமானத்தின் கட்டுபாட்டு அறைக்குள் (காக்பிட்) அழைத்துவந்துள்ளார். இந்த சம்பவம் பிப்ரவரி 27ம் தேதி துபாயில் இருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் நடந்துள்ளது.

மேலும், நண்பரை விமானத்தின் கட்டுபாட்டு அறைக்குள் அனுமதியில்லாமல் அழைத்துவந்தது, பாதுகாப்பு விதிமுறை மீறல் என்று சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் (டிஜிசிஏ) தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாக டிஜிசிஏ தெரிவித்திருந்தது.

மேலும், இந்த சம்பவத்திற்கு ஏர் இந்தியா எந்தவித உடனடி தீர்வும் காணவில்லை. இந்நிலையில், ஒழுங்குமுறைகள். பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையை உடனடியாகவும் திறம்படவும் தீர்க்காததற்காக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ), ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…

21 minutes ago

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…

31 minutes ago

“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…

1 hour ago

ராணுவத்திற்கு உதவ நாங்க தயார்! சண்டிகரில் குவியும் இளைஞர்கள்!

சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…

1 hour ago

”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…

1 hour ago

“அப்பாவி மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளை குறி வைக்கிறது பாகிஸ்தான்” – வியோமிகா சிங்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…

2 hours ago