மக்களே…இனி ரயில் பயணங்களில் இதை செய்யாதீர்கள்;மீறினால் அபராதம் – ரயில்வே நிர்வாகம் அதிரடி உத்தரவு!

Published by
Edison

ரயில்களில் பயணம் செய்யும் போது சத்தமாக பேசினாலோ அல்லது மொபைல் போனில் சத்தமாக பாட்டு கேட்டாலோ அபராதம் வசூலிக்கப்படும் என்று ரயில்வே  நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை பொதுவாக ரயில் பயணம் என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகவே உள்ளது.ஏனெனில்,குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் பயணம் செய்யும்போது பாட்டு பாடுவது,சத்தமாக பேசி மகிழ்வது , அரட்டை அடிப்பது என அனைத்திற்கும் ஏதுவாக இருக்கும்.எனினும்,அதே சமயம் சிலர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் நடந்து கொள்வதும் வழக்கமான ஒன்று.

இந்நிலையில்,ரயில்களில் பயணம் செய்வோருக்கான புதிய விதிமுறைகளை மத்திய ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.அதன்படி,ரயில்களில் பயணம் செய்பவர்கள் சத்தமாக பேச மற்றும் மொபைல் போனில் அதிகம் சத்தம் வைத்து பாட்டு கேட்க ரயில்வே நிர்வாகம் தடை விதிதுள்ளது.இதனை மீறி,ரயில்களில் பயணம் செய்யும் போது சத்தமாக பேசினாலோ அல்லது மொபைல் போனில் சத்தமாக பாட்டு கேட்டாலோ அபராதம் வசூலிக்கப்படும் என்றும்,கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சக பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் விதமாக சத்தமாக பேசுவது மற்றும் மொபைல் போனில் பாட்டு கேட்பது குறித்த புகார்களைப் பெற்றதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.அந்த வகையில்,சக பயணிகளின் புகாரின் அடிப்படையில் இதுபோன்ற பயணிகள் மீது ரயில்வே நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,

  • இரயிலில் இரவு 10 மணிக்கு பிறகு அனைத்து விளக்குகளையும் அணைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அதே சமயம்,ரயிலில் பயணம் செய்பவர்கள் தங்களுக்கு அசௌகரியமாக இருப்பதாக புகார் அளித்தால் உடனடியாக ரயில்வே போலீசார் மற்றும் டிக்கெட் பரிசோதகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு ரயில்வே ஊழியர்களே பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
  • மேலும்,ரயில்வே பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து ஊழியர்களும் பயணிகளிடம் பணிவுடன்,சாதுர்யமாகவும்,மரியாதையுடனும் நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
  • அதுமட்டுமல்லாமல்,60 வயதுக்கு மேற்பட்டவர்கள்,உடல் ஊனமுற்றோர் மற்றும் தனிமையில் உள்ள பெண்கள் பயணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் ரயில்வே ஊழியர்களால் வழங்கப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில்,சமீபத்தில் இது தொடர்பாக இரண்டு வார சிறப்பு பயணத்தை மேற்கொண்டரயில்வே அதிகாரிகள்,பயணத்தின் போது,சக பயணிகளிடம் தொலைபேசியில் சத்தமாக பேசுவதையும்,இயர்போன் இல்லாமல் இசை கேட்பதையும் தவிர்க்கவும் படி அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

Recent Posts

IND Vs ENG: ”தொடரில் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்க விரும்புகிறேன்” – சுப்மன் கில்.!

IND Vs ENG: ”தொடரில் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்க விரும்புகிறேன்” – சுப்மன் கில்.!

இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…

11 hours ago

மாறன் குடும்பத்தில் பிளவு? கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ்.!

சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…

11 hours ago

ஆபரேஷன் சிந்து: ஈரானை தொடர்ந்து இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர ஏற்பாடு.!

இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…

12 hours ago

வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்.., ”இது வெறும் கீறல்தான்”- எலான் மஸ்க் பதிவு.!

டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…

12 hours ago

ஜூன் 24, 25ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…

13 hours ago

அணு உலை தகர்ப்புக்கு பதிலடி.., இஸ்ரேலின் முக்கிய இடங்களை தாக்கிய ஈரான்.!

மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…

13 hours ago