75 வருடங்களாக ரக்ஷா பந்தன் கொண்டாடாத உத்திரப்பிரதேசத்தின் கிராமம்!

Published by
Rebekal

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் ஒன்றான உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட கூடிய ரக்ஷாபந்தன் கொண்டாடப்படுவதே இல்லையாம், ஏன் என்று தெரியுமா? வாருங்கள் அறிவோம்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள  கோண்டா மாவட்டத்தில் உள்ள துமாரியாதி வட்டத்தில் உள்ள சிறிய கிராமம் பிகாம்புர் ஜகத் புர்வா. இந்த கிராமத்தில் கடந்த 75 வருடங்களாக ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்படுவது இல்லையாம். சகோதரத்துவத்தை நிலைநாட்டுவதற்காகவும், அதிகப்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்படும் இந்த ரக்ஷா பந்தன் கடந்த 75 வருடங்களாக இந்த கிராமத்திலும் இதைச் சுற்றியுள்ள மற்ற சிறு சிறு கிராமங்களிலும் கொண்டாடபடாமல் இருக்கிறதாம்.

ஏன் ரக்ஷா பந்தன் என்னும் பெயரை உச்சரிப்பது கூட அங்குள்ள மக்கள் விரும்புவதில்லையாம். சிறியவர் முதல் பெரியவர்கள் வரையிலும் இந்த விழாவைக் கொண்டாடக் கூடாது என்ற ஒரு நம்பிக்கைதான் ஊறிக் கிடக்கிறது. ஏன் தெரியுமா? இதுகுறித்து அங்குள்ள சூரியநாராயணன் மிஸ்ரா எனும் பெரியவர் கூறும்பொழுது, கடந்த 1955 ஆம் வருடத்தில் ரக்ஷா பந்தன் தினத்தன்று எங்கள் குடும்பத்திலுள்ள இளைஞன் ஒருவன் கொல்லப்பட்டான். அதிலிருந்து அன்றைய தினத்தில் இந்த ரக்ஷா பந்தன் விழாவில் ராக்கி கட்டி கொள்வது நல்லதல்ல என்று இங்குள்ள இளம் பெண்கள் அஞ்சுகிறார்கள்.

இருந்தாலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை மட்டும் சில பெண்களின் வற்புறுத்தலால் இணங்கி இந்த ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்பட்டது அப்பொழுது ராக்கி கட்டி கொண்டு ஒருவரில் ஒருவர் அதே தினத்தன்று விரும்பத்தகாத சம்பவத்திற்கு உள்ளானார். அதிலிருந்து யாருமே இங்கு ராக்கி கட்டி கொள்ளவோ அல்லது அந்த பண்டிகை பெயரை உச்சரிப்பதற்க்கோ விரும்புவதில்லை என அவர் கூறியுள்ளார். இதுதான் அந்த இடத்தில் ரக்ஷா பந்தன் கொண்டாடாமல் இருப்பதற்கு காரணமாக உள்ளது.

Published by
Rebekal

Recent Posts

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

10 minutes ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

41 minutes ago

பஹல்காம் தாக்குதல்: பொதுமக்களிடம் இதெல்லாம் உள்ளதா.? என்ஐஏ வேண்டுகோள்.!

டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…

44 minutes ago

IND Vs PAK.. போர் பதற்றம்.., ஐபிஎல் தொடர் கைவிடப்படுகிறதா..? பிசிசிஐ விளக்கம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…

1 hour ago

சென்னையில் போர் பாதுகாப்பு ஒத்திகை.! ‘அச்சம் வேண்டாம்’ – பேரிடர் மேலாண்மை ஆணையம்.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூர்: வீர உரையாற்றிய இந்த சிங்கப்பெண்கள் யார்.? சிலிர்க்கும் பின்னணி..!!

டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…

3 hours ago