Odisha UnionMinister [FileImage]
புதன்கிழமை காலைக்குள் ரயில் சீரமைப்புப்பணிகள் நிறைவடைந்து ரயில்களை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என ரயில்வே அமைச்சர் தகவல்.
ஒடிசாவில் பாலசோர் அருகே நேற்று முன்தினம் மூன்று ரயில் மோதிய விபத்தில் மீட்புப்பணிகள் நிறைவடைந்து ரயில்களை சீரமைக்கும் பணிகள் நேற்றிலிருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. விபத்து நடந்த இடத்தில் சீரமைப்பு பணிகளைப் பார்வையிட்ட பிறகு மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், புதன்கிழமைக்குள் சீரமைப்பு பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
அவர் கூறியதாவது, பிரதமர் மோடி நேற்று விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டார், நாங்கள் இன்று ரயில் தண்டவாளங்களை சரிசெய்து வருகிறோம். சம்பவ இடத்திலிருந்து அனைத்து உடல்களும் மீட்கப்பட்டுவிட்டன. கூடியவிரைவில் வரும் புதன்கிழமை காலைக்குள் சீரமைக்கும் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம், சரிசெய்யப்பட்டுவிட்டால் இந்த தளங்கள் வழியே ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…