உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளாக இந்தியா மற்றும் அமெரிக்கா திகழ்கிறது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் 2 நாள் பயணமாக நேற்று இந்தியாவுக்கு வந்தடைந்தார். இன்று காலை இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை, அண்டனி பிளிங்கன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அமெரிக்கா, இந்தியா என இரு நாட்டின் உறவு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து முக்கிய தலைவர்களை கொண்ட ஆலோசனை கூட்டத்தில் பேசிய ஆண்டனி பிளிங்கன், உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளாக இந்தியா மற்றும் அமெரிக்கா திகழ்கிறது. கொரோனாவின் ஆரம்ப காலத்தில் அமெரிக்கா பெரும் பாதிப்புகளை இந்தியா உதவியது. தற்போது இந்தியாவிற்கு உதவுவதில் அமெரிக்கா பெருமைக்கொள்கிறது என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவும், அமெரிக்காவும் ஜனநாயக மாண்புகளை பேணிக் காப்பதில் கடமை பற்றுக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், அரசு முறை பயணமாக இந்திய வந்துள்ள ஆண்டனி பிளிங்கன், இன்று மாலை பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.
இதனிடையே, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராக அவர் பொறுப்பேற்ற பின்னர் பிளிங்கனின் இந்தியாவுக்கான முதல் பயணம் இதுவாகும். கடந்த ஜனவரி மாதம் ஜோபைடன் தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு இந்தியாவுக்கு வரும் அமெரிக்காவின் 3வது உயர்மட்ட தலைவராக இவர் இருப்பார் என்பது குறிப்பிடப்படுகிறது.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…