கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்.! சாமி வந்திருப்பதாக கூறி தலை விரித்தாடி ஆம்புலன்ஸில் ஏற மறுப்பு.!

Published by
Ragi

கொரோனா உறுதி செய்யப்பட்ட பெண் தனக்கு சாமி வந்திருப்பதாக கூறி சாமியாடி கொண்டு ஆம்புலன்ஸில் ஏற மறுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் தாவண்கரே மாவட்டத்தில் உள்ள ஹொனாலி பகுதியில் வசித்து வருபவர் ஜக்கம்மா. இவர் கொரோனாவுக்கான பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக ஆம்புலன்ஸூடன் சுகாதார துறை அதிகாரிகள் வந்து அவரை ஆம்புலன்ஸில் ஏற கூறியுள்ளனர்.

ஆனால் ஜக்கம்மா ஆம்புலன்ஸில் ஏற மறுத்ததுடன் தனக்குள் சாமி வந்திருப்பதாக கூறி தலையை விரித்து கொண்டு சாமி ஆடியுள்ளார். இதனை கண்ட சுகாதார துறை அதிகாரிகள் திகைத்து நிற்க , ஜக்கம்மாவின் வீட்டின் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து சாமியாடும் ஜக்கம்மாவிடம் கொரோனா எப்போது முடிவடையும் என்று கேள்வி எழுப்ப, விரைவில் கொரோனா பாதிப்பு குணமடைந்து நிலைமை சீராகி விடும் என்று ஜக்கம்மா அருள்வாக்கு கூறியுள்ளார் . அதனையடுத்து ஜக்கம்மா சகஜ நிலைக்கு திரும்பும் வரை அதிகாரிகள் வெயிட் செய்து அவரை ஆம்புலன்ஸில் ஏற்றி சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் வியப்பை ஏற்படுத்துயது குறிப்பிடத்தக்கது.

Published by
Ragi

Recent Posts

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

36 minutes ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

53 minutes ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

3 hours ago

‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…

3 hours ago

2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!

சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…

4 hours ago

“இப்போவாவது மத்திய அரசு கீழடி அறிக்கையை வெளியிடுமா தமிழர்களின் ஒரே கேள்வி” – தங்கம் தென்னரசு!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…

5 hours ago