ராஜஸ்தானில் இழுபறி.. காங்கிரஸ் – பாஜக இடையே கடும் போட்டி.!

Published by
மணிகண்டன்

கடந்த மாதம் நடந்து முடிந்த 5 மாநில  சட்டப்பேரவை தேர்தலில் மிசோராம் தவிர மற்ற மாநிலங்களான சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் , ராஜஸ்தான் , தெலுங்கானா ஆகிய தொகுதிகளின் தேர்தல் வாக்குப்பதிவு எண்ணப்பட்டு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன. காலை 8 மணி முதலே தொடங்கிய வாக்குப்பதிவு எண்ணிக்கை முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.

இதில்,  தெலுங்கானா , சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்று ஆட்சியை பிடிக்கும் என வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் தெரிவிக்கின்றன. அதே போல மத்திய பிரதேசத்தில் பாஜக தான் பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. அம்மாநிலத்தில் பாஜக இடையேயான முன்னிலை தொகுதிகளில் வித்தியாசம் சுமார் 50ஆக உள்ளது.

 10 ஆண்டுகால கே.சி.ஆர் சாம்ராஜ்யம் சரிகிறதா.? தெலுங்கானாவில் முன்னேறும் காங்கிரஸ்.!

காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக முன்னிலை பெற்று வந்தாலும்,  குறிப்பிட்ட குறைந்த அளவிலான தொகுதிகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் பின்தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.  தற்போது நிலவரப்படி 104 தொகுதிகளில் பாஜகவும் , 80 தொகுதிகளில் காங்கிரசும் முன்னிலை பெற்று வருகிறது.  5 தொகுதிகளில் மற்ற கட்சிகள் முன்னிலை பெற்று வருகிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் 52 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது . பாஜக 38 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது . தெலுங்காளவில் காங்கிரஸ் 65 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது.  ஆளும் பிஆர்எஸ் கட்சி 40 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது.

Recent Posts

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…

2 hours ago

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை! 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!

மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…

2 hours ago

சந்தர்ப்பவாதிகளாலும், துரோகிகளாலும் திமுகவை வீழ்த்த முடியாது! மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…

3 hours ago

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…

4 hours ago

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

6 hours ago

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…

6 hours ago