கும்பமேளா நிகழ்வில் கலந்து கொண்டு வீடு திரும்பியவர்கள் 14 நாட்கள் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு தெலுங்கானா சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வாரில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 17-ம் தேதி வரை கும்பமேளா நிகழ்வு நடைபெற்றது. இதில் பல்வேறு இடங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். கூட்டம் கூட்டமாக மக்கள் கூடிய நிலையில், அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற அனைத்து நடவடிக்கைகளும் காற்றில் பறக்கவிடப்பட்டது.
இந்நிலையில், கும்பமேளா நிகழ்வில் கலந்து கொண்டு வீடு திரும்பியவர்கள் 14 நாட்கள் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும், ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுமாறும் தெலுங்கானா சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது. கும்பமேளா நிகழ்வில் கலந்துகொண்ட 1,700 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தெலுங்கானாவில், இதுவரை, 3.79 லட்சத்திற்க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 1,928 பேர் உயிரிழந்துள்ளனர்.
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…
கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…
சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…