ஓடும் ரயிலில் டிக்டாக் அட்டூழியம்.! அரண்டுபோன பயணிகள்.! எச்சரித்த ரயில்வே துறை.! இதோ வீடியோ.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • ஓடும் ரயிலிலிருந்து டிக்டாக் சாகசம் செய்த இளைஞர் பார்ப்பவர்களின் இதயத் துடிப்பை ஒரு நொடி நிற்க வைக்கும் அளவுக்கு கொடுமையான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

டிக் டாக் செயலி இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக காணப்படுகிறது. இது ஒரு பொழுது போக்கு அம்சம் என்பதையும் தாண்டி இளைஞர்கள் முழு நேரமும் இதனை பயன்படுத்தி அதற்கு அடிமையாகி வருகின்றனர். இதனால் டிக் டாக் கலாச்சாரத்தைச் சீரழிக்கிறது என்ற குற்றச்சாட்டையும் தாண்டி சில நேரங்களில் உயிரிழப்புகளும் நேர்ந்திருக்கிறது என குறிப்பிடப்படுகிறது. குறிப்பாக இந்த டிக் டாக்கில் சாகசம் என்ற பெயரில், பல ஆபத்தான செயல்களில் இளைஞர்கள் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் ஓடும் ரயிலிலிருந்து இறங்கி இளைஞர் ஒருவர் டிக் டாக் செய்யும் வீடியோ பார்ப்பவர்களின் இதயத் துடிப்பை ஒரு நொடி நிற்க வைக்கிறது.

இந்நிலையில் அந்த வீடியோவில், வேகமாக ஓடும் ரயிலிலிருந்து இறங்கும் அந்த இளைஞர் கீழே விழுந்து கிட்டத்தட்ட ரயிலின் சக்கரத்தின் அடியில் இழுத்துச் செல்லப்படுவதை பார்க்க முடிகிறது. பின்னர் ரயில் நிற்காமல் சென்றுகொண்டிருக்க அந்த இளைஞர் சக்கரத்தின் பகுதியிலிருந்து சற்று ஒதுங்கி சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இது ஸ்டண்டுக்காக அவர் இப்படி செய்தாக இணையத்தில் கூறப்படுகிறது. இந்த வீடியோவை ரயில்வே அமைச்சகம் பிப்ரவரி 18 பகிர்ந்துள்ளது. அதில் இதுபோன்று உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையிலான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் எனவும், இவரைப் பார்த்து மற்றவர்கள் இதுபோன்று முயற்சியில் ஈடுபட கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது. மேலும் ஓடும் ரயிலில் ஏறுவதும் இறங்குவதும் ஆபத்தானது என்றும் எச்சரித்துள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…

32 minutes ago

“லாக்கப் மரணங்கள் நீடிப்பது கவலை அளிக்கிறது”…திருமாவளவன் வேதனை!

சென்னை :  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

1 hour ago

மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர்…பேருந்தில் இவ்வளவு சிறப்பம்சங்களா?

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…

1 hour ago

விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வி…உண்மையை உடைத்த மருத்துவர்!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…

3 hours ago

காசாவில் போர் நிறுத்தம் கொண்டுவரனும்! அழைப்பு விடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்!

வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காசாவில் உடனடி போர் நிறுத்தம் கொண்டுவர வேண்டும் என இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.…

4 hours ago

“இந்தி கட்டாயம் என்ற முடிவு வாபஸ்”…,மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் அறிவிப்பு!

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் இந்தியை மூன்றாவது மொழியாக கட்டாயமாக்குவதற்கு மாநில அரசு…

4 hours ago