14 பேர் உயிரை பலி கொண்ட ஆந்திர ரயில் விபத்து..! ஓட்டுநர்கள் கிரிக்கெட் பார்த்ததே காரணம்.. பகீர் தகவல்

Published by
Ramesh

Train Accident: 14 பேரின் உயிரை காவு வாங்கிய ஆந்திர மாநில ரயில் விபத்திற்கு ஓட்டுனர்கள் கிரிக்கெட் போட்டியை பார்த்ததே காரணம் என தெரியவந்துள்ளது. கிரிக்கெட் போட்டியை கண்டு களித்ததால் ஏற்பட்ட கவனச் சிதைவே விபத்திற்கான காரணம் என நாட்டின் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

Read More – மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 34 அமைச்சர்கள்! சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு வாய்ப்பு

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசா மாநிலம் ராயகடாவுக்கு நேற்று முன்தினம் பயணிகள் ரயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலும் விசாகப்பட்டினம்-பாலசா பயணிகள் ரயிலும் ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளி தண்டவாளத்தில் மோதி விபத்துக்குள்ளாகின. விசாகப்பட்டினம் ராயகடா பயணிகள் ரயில் தண்டவாளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில், அதே தண்டவாளத்தில் விசாகப்பட்டினம்-பாலசா பயணிகள் ரயில் வந்ததால் இவ்விபத்து நடந்துள்ளது.

இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்த நிலையில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலையில் இந்திய ரயில்வேயின் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசுகையில்” ஆந்திர ரயில் விபத்திற்கு மிக முக்கியமான காரணம் வண்டியை இயக்கிய லோகோ பைலட்கள் கிரிக்கெட் போட்டியை பார்த்துக் கொண்டே வண்டியை இயக்கியது தான்.

இதன் மூலம் அவர்களது கவனம் சிதறடிக்கப்பட்டு விபத்துக்குள்ளானது. ஓட்டுநர்கள் மற்றும் உதவி ஓட்டுநர்கள் ரயிலை இயக்குவதில் முழுமையாக கவனம் செலுத்துவதை உறுதி செய்கிறோம். ஒவ்வொரு சம்பவத்திலும் மூல காரணத்தை கண்டறிய முயற்சி செய்து, அது மீண்டும் நடக்காமல் இருக்க ஒரு தீர்வைக் கொண்டு வருகிறோம்” என்றார்.

Read More – மக்களவை தேர்தல்..! 195 பேர் கொண்ட பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியல்.. வாரணாசியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டி

 

Published by
Ramesh

Recent Posts

எங்களுடைய கூட்டணி ஆட்சியமைக்ககும் என்றுதான் அமித்ஷா சொன்னார்..இபிஎஸ் விளக்கம்!

சென்னை : அடுத்த ஆண்டு (2026) நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவிருக்கிறது. தேர்தலுக்கான வேலைகளில் இரண்டு…

29 minutes ago

நல்லா விளம்பரம் பண்றீங்க..ரொம்ப நன்றி! இபிஎஸ்க்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த பதிலடி!

சென்னை : மக்களின் குறைகளை விரைவாகத் தீர்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை ஜூலை 15-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின்…

1 hour ago

நிமிஷா பிரியா வழக்கு : “கொலையை நியாப்படுத்த முடியாது..தண்டிக்கப்படணும்” இறந்தவரின் சகோதரர் பேச்சு!

டெல்லி : ஏமனில் கடந்த 2017-ம் ஆண்டு தலால் அப்தோ மஹ்தி என்பவரைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளியாகக் கருதப்பட்டு கேரளாவைச்…

2 hours ago

மதுரை : விஜயகாந்தின் பிறந்தநாள் அன்று த.வெ.க 2-வது மாநில மாநாடு?

மதுரை :தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. இந்த மாநாடு…

3 hours ago

இனிமே ரூ.200 தான் டிக்கெட் விலை…குட் நியூஸ் சொன்ன கர்நாடக அரசு!

கர்நாடகா : இனிமேல் கர்நாடகாவில் வெளியாகும் அனைத்து மொழி படங்களுக்கு டிக்கெட் விலை ஒவ்வொரு திரையரங்குகளில் ரூ.200 ஆக இருக்கவேண்டும்…

3 hours ago

ரோஹித் – கோலி ஓய்வு பெற அழுத்தம் கொடுக்கப்பட்டதா? விளக்கம் கொடுத்த பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட்டின் மிகப் பெரிய நட்சத்திரங்களான ரோஹித் ஷர்மாவும், விராட் கோலியும் 2025 மே மாதத்தில் டெஸ்ட்…

5 hours ago