நாடாளுமன்றத்தில் அத்துமீறல்.! தொடரும் கைது நடவடிக்கைகள்… ஒருவர் தப்பியோட்டம்.!

Published by
மணிகண்டன்

நேற்று நாடாளுமன்றத்தில் 2001ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 22ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. அந்த தினத்தில் நாடாளுமன்ற பார்வையாளர்கள் அரங்கில் இருந்த 2 இளைஞர்கள் திடீரென மக்களவைக்குள் குதித்து கோஷமிட்டனர். மேலும் காலில் மறைத்து வைத்து இருந்த மஞ்சள் வண்ண பூச்சிகளையும் அவர்கள் வெடிக்க செய்தனர். இதனால் நாடாளுமன்ற பாதுகாப்பே கேள்விக்குறியாகும் அளவுக்கு விவகாரம் பூதகரமானது .

அதீத பாதுகாப்பு கொண்ட பாராளுமன்றத்தில் இருவர் மக்களவைக்குள் குதித்தது எப்படி.? காலில் வண்ண பூச்சிகளை எப்படி கொண்டு வர முடிந்தது.? ஒருவேளை வேறு பயங்கர வெடிபொருள் கொண்டு வந்தால் என்னவாகி இருக்கும் என்ற கேள்விகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருக்கிறது. இதனால் நாடாளுமன்ற பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கடிதம் எழுதியுள்ளார். பாராளுமன்ற பாதுகாப்பு குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்த நபர்கள் – இந்திய கூட்டணி எம்.பி-க்கள் இன்று ஆலோசனை..!

மக்களவையில் இரு இளைஞர்கள் குதித்து கோஷமிட்ட அதே நேரத்தில் வெளியில் ஒரு பெண்ணும், இளைஞரும் அதே போல வண்ண பூச்சிகளை வெளிப்படுத்தி அரசுக்கு எதிராக கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.  இதனால் நாடாளுமன்ற வளாகமே பரபரப்பானது. இந்த விவகாரம் தொடர்பாக தனிப்படையினர் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை கைது செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

அதில், மக்களவைக்குள் உள்ளே குதித்தது கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மனோரஞ்சன் மற்றும் உத்திர பிரதேசத்தை சேர்ந்த சாகர் சர்மா என்பது தெரியவந்தது. அதில் மனோரஞ்சன் ,  மைசூர் தொகுதி எம்பி பிரதாப் சிம்ஹா அலுவலகத்திற்கு தொடர்ந்து வந்து பாராளுமன்ற பார்வையாளர் அனுமதி சீட்டை வாங்கியுள்ளார். சாகரை தனது நண்பர் என கூறி 2 நுழைவு சீட்டு வாங்கியுள்ளார்.

பாராளுமன்றத்திற்கு வெளியே  கோஷமிட்டவர்கள் ஹரியானா, ஜிந்தூரை சேர்ந்த நீலம் எனும் மாணவி மற்றும் மகாராஷ்டிரா மாநிலம் லத்தூரை சேர்ந்த வேலையில்லா பட்டதாரி அமோல் என்பதும் கண்டறியப்பட்டது.  இவர்கள் கோஷம் போடுவதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டவர்  லலித் என்பதும் கண்டறியப்பட்டது.

இவர்கள் அனைவருக்கும் குருகிராமில் தங்க இடம் அளித்தது விஷால் சர்மா எனும் ஆட்டோ ஓட்டுநர். அவரையும் அவரது மனைவியையும் டெல்லி போலீசார் கைது செய்தனர். இதில் லலித் மட்டும் அங்கிருந்து தப்பித்து விட்டார். அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Recent Posts

அன்புமணி நடைப்பயணத்துக்கு தடை கோரி ராமதாஸ் மீண்டும் மனு.!

சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…

4 minutes ago

கேரள கன்னியாஸ்திரிகள் மீது ஆள்கடத்தல், கட்டாய மதமாற்ற வழக்குப்பதிவு – மு.க.ஸ்டாலின் கண்டனம்.!

கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…

32 minutes ago

நாய்-க்கு இருப்பிடச் சான்றிதழ்.., வினோத சம்பவத்தால் பீகாரில் எழுந்தது சர்ச்சை.!

பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…

1 hour ago

நெல்லை அருகே நடந்த ஆணவக் கொலையில் கைதான இளைஞரின் புகைப்படம் வெளியீடு.!

நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…

2 hours ago

“சிவகாசி தொகுதியில்தான் போட்டியிடுவேன்” – கண்ணீர் மல்க சூளுரைத்த ராஜேந்திர பாலாஜி.!

சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…

2 hours ago

பாஜக, திமுக நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள் – விஜய் அறிக்கை.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…

3 hours ago