திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மகுவா மொய்த்ரா எம்பி பதவியில் இருந்து நீக்கம்!

Published by
பாலா கலியமூர்த்தி

நாடாளுமன்ற மக்களவையில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் மகுவா மொய்த்ரா தகுதி நீக்கம் செய்யப்பட்டார். நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்றதாக எழுந்த புகாரில், நெறிமுறைக் குழுவின் பரிந்துரையின் பேரில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மகுவா மொய்த்ராவின் பதவி பறிக்கப்பட்டது.

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மகுவா மொய்த்ரா மக்களவையில் தொழிலாலதிபர் அதானி குழுமத்துக்கு எதிராக கேள்வி எழுப்ப, தொழிலதிபா் தா்ஷன் ஹீராநந்தானியிடம் லஞ்சம் வாங்கியதாக, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே புகாா் அளித்திருந்தார்.

இந்தப் புகாரை விசாரிக்க மக்களவை நெறிமுறைகள் குழுவுக்கு ஓம் பிா்லா பரிந்துரைத்தாா். அதன்படி, நாடாளுமன்ற நன்னடத்தை குழு, மகுவா மொய்த்ரா மீதான புகார் குறித்து விசாரணை நடத்திய நிலையில், அதுதொடர்பான விசாரணை குறித்த அறிக்கையும் வெளியிடப்பட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து, நெறிமுறைகள் குழு, மகுவாவை எம்.பி. பதவியில் இருந்து நீக்க பரிந்துரைத்து அறிக்கையை குழுவின் தலைவா் வினோத் குமாா் சோன்கா் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். அப்போது, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மகுவா மொய்த்ரா தனது தரப்பை விளக்கப் போதிய வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

மகுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய மக்களவையில் தீர்மானம் தாக்கல்..!

அந்த அறிக்கை இன்று பிற்பகல்  பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், மக்களவையில் இருந்து திரிணமூல் எம்.பி. மகுவா மொய்த்ராவை நீக்கம் செய்யும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, மக்களவையில் இருந்து திரிணமூல் எம்.பி. மகுவா மொய்த்ரா நீக்கப்பட்டதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.

நாடாளுமன்ற விதிகளை மீறி மாண்பை கலைக்கும் வகையில் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது. எனவே,  நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப பணம் பெற்ற குற்றச்சாட்டில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மகுவா மொய்த்ரா எம்பி பதவியில் நீக்கம் செய்யப்பட்டார். மகுவா மொத்த்ரா தகுதிநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகளின் உறுப்பினர் வெளிநடப்பு செய்தனர்.

இதனால் மக்களவை வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதுதொடர்பாக மகுவா மொய்த்ரா கூறியதாவது, முழுமையாக விசாரணை நடத்தப்படாமல் என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நான் பணம் பெற்றதற்கான எந்த ஆதாரமும் இல்லாத நிலையிலும் ஒழுங்கு நடவடிக்கை குழு பதவியை நீக்க பரிந்துரை செய்துள்ளது. எம்பி பதவியை பறிக்க நெறிமுறைக் குழுவிற்கு அதிகாரம் இல்லை, இது பாஜகவுடைய முடிவின் ஆரம்பம் என்றார்.

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

3 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

4 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

4 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

5 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

5 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

7 hours ago