Magua Moitra is disqualified (PTI)
நாடாளுமன்ற மக்களவையில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் மகுவா மொய்த்ரா தகுதி நீக்கம் செய்யப்பட்டார். நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்றதாக எழுந்த புகாரில், நெறிமுறைக் குழுவின் பரிந்துரையின் பேரில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மகுவா மொய்த்ராவின் பதவி பறிக்கப்பட்டது.
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மகுவா மொய்த்ரா மக்களவையில் தொழிலாலதிபர் அதானி குழுமத்துக்கு எதிராக கேள்வி எழுப்ப, தொழிலதிபா் தா்ஷன் ஹீராநந்தானியிடம் லஞ்சம் வாங்கியதாக, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே புகாா் அளித்திருந்தார்.
இந்தப் புகாரை விசாரிக்க மக்களவை நெறிமுறைகள் குழுவுக்கு ஓம் பிா்லா பரிந்துரைத்தாா். அதன்படி, நாடாளுமன்ற நன்னடத்தை குழு, மகுவா மொய்த்ரா மீதான புகார் குறித்து விசாரணை நடத்திய நிலையில், அதுதொடர்பான விசாரணை குறித்த அறிக்கையும் வெளியிடப்பட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து, நெறிமுறைகள் குழு, மகுவாவை எம்.பி. பதவியில் இருந்து நீக்க பரிந்துரைத்து அறிக்கையை குழுவின் தலைவா் வினோத் குமாா் சோன்கா் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். அப்போது, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மகுவா மொய்த்ரா தனது தரப்பை விளக்கப் போதிய வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
மகுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய மக்களவையில் தீர்மானம் தாக்கல்..!
அந்த அறிக்கை இன்று பிற்பகல் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், மக்களவையில் இருந்து திரிணமூல் எம்.பி. மகுவா மொய்த்ராவை நீக்கம் செய்யும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, மக்களவையில் இருந்து திரிணமூல் எம்.பி. மகுவா மொய்த்ரா நீக்கப்பட்டதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.
நாடாளுமன்ற விதிகளை மீறி மாண்பை கலைக்கும் வகையில் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது. எனவே, நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப பணம் பெற்ற குற்றச்சாட்டில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மகுவா மொய்த்ரா எம்பி பதவியில் நீக்கம் செய்யப்பட்டார். மகுவா மொத்த்ரா தகுதிநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகளின் உறுப்பினர் வெளிநடப்பு செய்தனர்.
இதனால் மக்களவை வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதுதொடர்பாக மகுவா மொய்த்ரா கூறியதாவது, முழுமையாக விசாரணை நடத்தப்படாமல் என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நான் பணம் பெற்றதற்கான எந்த ஆதாரமும் இல்லாத நிலையிலும் ஒழுங்கு நடவடிக்கை குழு பதவியை நீக்க பரிந்துரை செய்துள்ளது. எம்பி பதவியை பறிக்க நெறிமுறைக் குழுவிற்கு அதிகாரம் இல்லை, இது பாஜகவுடைய முடிவின் ஆரம்பம் என்றார்.
குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…
சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக,…
நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…
திண்டிவனம்: பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் இருந்து தலைவர்…
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…