டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்த ட்ரூடோவின் கருத்துக்கள் – கனட தூதரை அழைத்து புகாரளித்த இந்தியா!

Published by
Rebekal

டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்த கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த கருத்துக்கள் இருநாட்டு உறவை பாதிக்கும் என கனட தூதரை அழைத்து இந்தியா புகாரளித்துள்ளது. 

புதியதாக இந்தியாவில் கொண்டுவரப்பட்டுள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லி எல்லையில் கடந்த 9 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த விவசாயிகளின் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினர் இந்தியாவில் ஆதரவு தெரிவித்துவரும் நிலையில் வெளிநாட்டிலிரந்து ஆதரவு தெரிவித்த ஒரே பிரதமர் என்றால் அது கனடா நாட்டின் பிரதமர் தான். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மட்டும் இது குறித்து பேசிய போது விவசாயிகளின் உரிமைகளை போராடி நிலை நாடுவதற்கு கனடா என்றுமே துணைநிற்கும் எனவும், விவசாயிகள் போராட்டம் நடத்திக் கொண்டிருப்பது தனக்கு கவலை அளிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இவரது கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வந்தனர்.

இது தொடர்பாக, மத்திய அரசு கூறுகையில் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ஜஸ்டின் ட்ரூடோ வின் கருத்து இருநாட்டு உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் வெளியுறவுத் துறை சார்பில் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பதாகவும் இந்திய வெளியுறவு துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத் துறை வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், கனட தூதருக்கு வெளியுறவுத் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. கனடாவின் பிரதமர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பேசி வரும் கருத்து மூலமாக இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கனடா தூதரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் இருநாட்டு உறவுகளில் இது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் சுட்டிக்காட்டி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம்! குவியும் வாழ்த்துக்கள்!

இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம்! குவியும் வாழ்த்துக்கள்!

சென்னை : இந்திய சினிமாவில் தரமான படங்களை கொடுத்துவரும் இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. சென்னையில் அமைந்துள்ள…

5 hours ago

போஸ் கொடுப்பது மட்டும்தான் பிரதமரின் வேலையா? – மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!

டெல்லி : இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக்…

5 hours ago

தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 4-5 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…

6 hours ago

பிளே ஆஃப் செல்லப்போவது யார்? மும்பை vs டெல்லி இடையே கடுமையான போட்டி!

மும்பை : ஐபிஎல் 2025 மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. ஏற்கனவே, 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு…

6 hours ago

தேசத்தில் அழிக்கும் கட்சி ஒன்று இருக்கிறதென்றால் அது பாஜக! செல்வப்பெருந்தகை விமர்சனம்!

சென்னை : சமீபத்தில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிவகங்கை தொகுதி கார்த்தி சிதம்பரம் எம்.பி.காங்கிரஸ்…

7 hours ago

CSK vs RR : அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் – வைபவ்..! சென்னை மீண்டும் தோல்வி.!

டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…

14 hours ago