ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவு ஒன்றை நீக்கியது ட்விட்டர் நிறுவனம்…!

Published by
Rebekal

போக்சோ சட்டத்திற்கு எதிராக இருந்ததால் ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவு ஒன்றை ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.

டெல்லியில் உள்ள கண்டோன்மென்ட் பகுதியில் கடந்த ஒன்றாம் தேதி தலித் சிறுமி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். மேலும், சிறுமியின் உடல் வலுக்கட்டாயமாக தகனம் செய்யப்பட்டுள்ளது. எனவே, சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதன் காரணமாக மயானத்தின் பூசாரி மற்றும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை கடந்த சில தினங்களுக்கு முன்னதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் நேரில் சென்று சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறி இருந்தார். அதன் பின் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த புகைப்படம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது என சர்ச்சை எழுந்தது.

எனவே, இது தொடர்பாக ட்விட்டர் நிறுவனத்திற்கு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு தேசிய ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதில் சட்டத்தை மீறி பெற்றோரின் புகைப்படத்தை பதிவு செய்ததன் மூலம் சிறுமியின் அடையாளம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ராகுல்காந்தி இந்த பதிவை உடனடியாக நீக்க ட்விட்டர் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்ப புகைப்படத்தை பகிர்ந்தது தொடர்பாக ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்யக் கோரி டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் வினித் ஜிண்டால் என்பவரும் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் விமர்சனத்துக்கும், சர்ச்சைக்கும் உள்ளாகிய ராகுல் காந்தியின் இந்த ட்விட்டர் பதிவு தற்பொழுது ட்விட்டர் நிறுவனத்தால் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

13 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

13 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

13 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

14 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

15 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

17 hours ago