10 மற்றும் 12-ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு வருடத்திற்கு இரண்டு பொதுத்தேர்வுகள்…!

Published by
லீனா

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் மற்றும் மார்ச் மாதங்களில் இரண்டு பருவங்களாக தேர்வுகள் நடத்தி மதிப்பீடுகளை வழங்கும் முறையை சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. எனவே மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் , கொரோனா பரவல் அதிகரித்து வந்ததையடுத்து  சிபிஎஸ்சி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. தற்போது 2021-2022 ஆம் ஆண்டு கல்வி ஆண்டை சிபிஎஸ்சி வாரியம் இரண்டாக பிரித்து உள்ளது. அதன்படி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் மற்றும் மார்ச் மாதங்களில் இரண்டு பருவங்களாக தேர்வுகள் நடத்தி மதிப்பீடுகளை வழங்கும் முறையை அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின்படி, 2021 ஆம் ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதங்களில் ஒரு பருவத்தேர்வும், 2022-ஆம் ஆண்டு மார்ச்-ஏப்ரல் மாதங்களில் இரண்டாவது பருவத் தேர்வும் நடத்த முடிவு எடுத்துள்ளது. முதல் பருவத் தேர்வில் கேள்விகள் ஏதும் இல்லாமல்  சரியான விடையை மட்டும் தேர்ந்தெடுத்து எழுதுவது போன்ற வடிவில் வினாத்தாள் அமைக்கப்பட்டிருக்கும். இதற்காக மாணவர்களுக்கு ஓஎம்ஆர் ஷீட் வழங்கப்படும். இந்த தேர்வை எழுத 90 நிமிடங்கள் கால அவகாசம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இரண்டாம் பருவ தேர்வில் மாணவர்கள் குறுகிய, நீண்ட விடை அளிக்கும் விதத்தில் கேள்வி கேட்கப்படும். இந்த தேர்வுக்கு 2 மணி நேரங்கள் வழங்கப்படும் என்றும், கொரோனா பரவல் அதிகமாக காணப்பட்டால், முதல் பருவத்தேர்வை போல, சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதும் முறையிலே தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2021-2022-ம் கல்வி ஆண்டில் பள்ளிகள் திறக்க இயலாத சூழல் காணப்பட்டால், மாணவர்கள் தேர்வை வீட்டில் இருந்தவாறே எழுதலாம் என்றும், உள்மதிப்பீடு, செய்முறைத் தேர்வு, ப்ராஜெக்ட் ஆகியவை வழிகாட்டுதலின்படி நம்பகத்தன்மையான முறையில் நடத்தப்பட்டு அந்த மதிப்பெண்களும் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
லீனா

Recent Posts

“தமிழ்நாட்டின் வளர்ச்சியே எங்களது முன்னுரிமை” -பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

“தமிழ்நாட்டின் வளர்ச்சியே எங்களது முன்னுரிமை” -பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…

1 minute ago

தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி…என்னென்ன சிறப்பம்சங்கள்?

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…

56 minutes ago

தமிழகம் வந்தடைந்த பிரதமர் மோடி…தூத்துக்குடியில் உற்சாக வரவேற்பு!

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…

1 hour ago

அஜித்துடன் ஆக்சன் படம் செய்வேன் …உறுதி கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…

2 hours ago

INDvsENG : இங்கிலாந்து அணியின் அபார பேட்டிங்.. தடுமாறும் இந்தியா!

மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…

2 hours ago

பிரதமர் மோடி தமிழகம் வருகை…பாஜக, அதிமுக கொடியுடன் விசிக கொடி!

அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…

3 hours ago