KarnatakabusAccident [Image : Twitter/@CMalenadutoday]
கர்நாடகாவில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் ஷிமோகா தாலுக்காவில் உள்ள சோரடி என்ற இடத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் பேருந்தில் பயணம் செய்த 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதனையடுத்து தகவல் அறிந்து வந்த காவல் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தில், பலர் பேருந்தில் சிக்கிக் கொண்டுள்ளனர், அவர்களை மீட்கும் பணி தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
10 உயிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. அதனால் ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. மேலும் போலீசார், உள்ளூர் மக்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வருகின்றனர். இச்சம்பவத்தால், நெடுஞ்சாலை முற்றிலுமாக ஸ்தம்பித்தது.
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…