ஒடிசாவில் இன்று முதல் வருகின்ற 19ஆம் தேதி வரையில் 14 நாட்களுக்கும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள கொரோனாவின் தாக்கத்தை கருத்தில் கொண்டு அந்த மாநில அரசுகளும் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்குகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த அம்மாநில அரசு இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்த இருப்பதாக அண்மையில் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்பொழுது இன்று காலை 5 மணி முதல் வருகிற மே 19ஆம் தேதி வரையிலும் ஒடிசாவில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி அங்கு சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் ஊரடங்கு அமலில் இருந்தாலும் மளிகை கடைகள் இறைச்சி கடைகள் மட்டும் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி அனைத்து விளையாட்டு மைதானங்கள், தியேட்டர்கள், வழிபாட்டுத்தலங்கள், மால்கள், சலூன் கடைகள், அழகு நிலையங்கள் அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பேருந்துகளுக்கு இயங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் மருத்துவ தேவைகளுக்காக மட்டுமே பேருந்தில் பயணிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் திருமணம் நடத்துவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்தாலும் 50 பேர் மட்டுமே திருமணத்தில் கலந்து கொள்ளலாம் எனவும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…