ஊரடங்கை மீறியதால் இரு சக்கர வாகனம் பறிமுதல்.! இளைஞர் தீக்குளிப்பு.!

Published by
மணிகண்டன்

தனது இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்ததால் கேரளா, மூணாறு அருகேயுள்ள சூரியநெல்லி எனும் ஊரை சேர்ந்த விஜய பிரகாஷ் என்கிற இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார்.

கொரோனா முன்னெச்செரிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் அத்தியாவசிய தேவைகள் இன்றி வேறு யாரும் சரியான காரணம் இன்றி வீதியில் சுற்றினால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கேரள மாநிலம் மூணாறு அருகேயுள்ள சூரியநெல்லி எனும் ஊரில் விஜய பிரகாஷ் என்கிற 24 வயது இளைஞர் அப்பகுதி வீதியில் அவரது இருசக்கர வாகனத்தில் சுற்றித்திருந்துள்ளார் என கூறப்படுகிறது. இதனை கண்டு சாந்தம்பாறை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பியுள்ளதாகவும் தெரிகிறது.

ஆனால், அத்தனையும் மீறி, மீண்டும் அந்த இளைஞர் இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்ததால் அந்த இருசக்கர வாகனத்தை அப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இதனால், மனமுடைந்த அந்த இளைஞர் தனது உடலில் டீசல் ஊற்றிக்கொண்டு பறிமுதல் செய்யப்பட்ட தனது வாகனத்தை தராவிட்டால் தற்கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதாக தெரிகிறது.

பின்னர், அந்த இளைஞரின் உடலில் தீ பற்றிக்கொண்டது. தீ காயங்களுடன் மெயின் ரோட்டில் அலைந்து திரிந்த அந்த இளைஞர் உடலில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க பொதுமக்கள் முற்பட்டனர். பின்னர் தீக்காயங்களுடன் கோட்டயம் மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு அந்த இளைஞர் கொண்டு செல்லப்பட்டார்.  பின்னர் சிகிச்சை பலனின்றி விஜய் பிரகாஷ் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

இஸ்ரேலும் ஈரானும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறாங்க! டொனால்ட் டிரம்ப் பேச்சு!

இஸ்ரேலும் ஈரானும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறாங்க! டொனால்ட் டிரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட  இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…

5 hours ago

எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…

6 hours ago

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு! தமிழக அரசு உத்தரவு!

சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…

6 hours ago

ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…

7 hours ago

பாமக மோதல் : பொறுப்பை பறித்த அன்புமணி… “அவருக்கு அதிகாரமில்லை” டென்ஷனான அருள்!

பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…

8 hours ago

த.வெ.க தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் எப்போது சுற்றுப்பயணம்? ஆதவ் அர்ஜுனா முக்கிய தகவல்!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…

8 hours ago