பதவி ஏற்பு விழா -பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவின் முதலமைச்சராக இன்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவி ஏற்க உள்ளார். மும்பையில் உள்ள சிவாஜி மைதானத்தில் பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது. இதற்காக மும்பையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவின் முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க காங்கிரஸ் முதலமைச்சர்கள் ,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ,மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பனர்ஜி மற்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்தார்.இந்த நிலையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பிரதமர் நரேந்திர மோடிக்கும் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.தொலைபேசி மூலமாக பிரதமருக்கு அழைப்பு விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025