மே.வங்க மாநிலம் சிலிகுரிக்கு வரும் 17ம் தேதி செல்ல இருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பயணம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.
மே.வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் இந்த தேர்தலில் வெற்றி பெற்று மேற்கு வங்கத்தில் முதல் முறையாக ஆட்சியமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பாரதிய ஜனதா சார்பில் தேர்தல் பணிகள் இப்போதே துவக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மாநிலத்தில் வரும் 22ம் தேதி முதல் 26ம் தேதி வரை துர்கா பூஜை கொண்டாடப்பட உள்ளது. இதில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிலிக்குரிக்கு செல்ல திட்டமிட்டு இருந்தார். ஆனால் அவரது சிலிகுரி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. அந்த நிகழ்ச்சியில் அவருக்குப் பதிலாக பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா 19ம் தேதி சிலிக்குரிக்கு சென்று பொதுக் கூட்டத்தில் பங்கேற்பார் என பா.ஜ. வட்டாரங்கள் தெரிவித்தன. அமித் ஷா துர்கா பூஜை முடிந்த பின் மேற்கு வங்கத்துக்கு செல்வார் என்றும் பா.ஜ. வட்டாரங்கள் தெரிவித்தன.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…