அமெரிக்காவை சேர்ந்த நிறுவனமான டெஸ்லா ,2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் விற்பனையத் தொடங்க உள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
தனியார் செய்தி நிறுவனத்திற்கு அமைச்சர் நிதின் கட்கரி பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,ஏராளமான இந்திய நிறுவனங்களும் மின்சார வாகனங்களை தயாரித்து வருகின்றன.அவை மிகவும் மலிவாக இருக்கும் .ஆனால் தொழில்நுட்ப ரீதியாக டெஸ்லாவைப் போலவே மேம்பட்டவை.டெஸ்லா முதலில் விற்பனையுடன் நடவடிக்கைகளைத் தொடங்கும். பின்னர் கார்களுக்கான உற்பத்தியைப் தொடங்கும்.”ஐந்து ஆண்டுகளில் இந்தியா ஆட்டோவிற்கான நம்பர் 1 உற்பத்தி மையமாக மாறப்போகிறது” என்று கூறினார்.
ஏற்கனவே இது குறித்து டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலன் மஸ்க் கூறுகையில்,அடுத்த ஆண்டு நிச்சயமாக தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அண்மையில் வெளியான அறிக்கைகளின் படி,இந்தியாவுக்கு வரும் டெஸ்லாவின் முதல் மாடல் மிகவும் மலிவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான முன்பதிவு சில வாரங்களில் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .உலகின் பிற பகுதிகளைப் போலவே டெஸ்லாவும் இந்தியாவின் விற்பனையை நேரடியாகக் கையாள உள்ளது.
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…