ஜூன் 8 முதல் ஷாப்பிங் மால், தியேட்டர் திறப்பதினால் புதிய நடைமுறை ( SOPs) மத்திய அரசு ஒன்றை வெளியிட்டுள்ளது.
UNLOCK 1.0 கீழ் ஜூன் 8 முதல் வழிபாட்டுத் தலங்கள் பொதுமக்களுக்காக திறக்கப்படுகின்றன. கொரோனா பரவலை தடுக்கும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு நடைமுறை ( SOPs) ஒன்றை வெளியிட்டுள்ளது.
UNLOCK 1.0 இல் 3ஆம் கட்டத்தில் மெட்ரோ ரயில், சினிமா மால்கள் , நீச்சல் குளம், ஜிம் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள் செயல்பட முடிவு எடுக்கப்படும். தடை செய்யப்பட்ட பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் தொற்றின் தாக்கத்தை பொறுத்து மாவட்ட நிர்வாகங்கள் முடிவு செய்யலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மால்களில் வரும்பொழுது உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட வேண்டும்.நுழைவு வாயில் சானிடைசர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 65 வயதுக்கு மேல் இருக்கும் முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிகள், 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். முகக்கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.
உணவகத்தில் இருக்கைகளுக்கு இடையே போதுமான சமூக இடைவெளி பின்ப்பற்ற வேண்டும். மெனு கார்டுகளை ஒவ்வொரு முறையும் மாற்றி பயன்படுத்த வேண்டும். துணி நாப்கின்களுக்கு பதிலாக, நல்ல தரமான ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும்,
கொரோனா அறிகுறிகள் இல்லாதவர்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். சமூக தொலைதூர இடைவெளி உறுதிப்படுத்த ஹோட்டல் நிர்வாகம் போதுமான ஆட்களை நியமிக்க வேண்டும். ஷாப்பிங் மால்களில் உள்ள திரையரங்குகளை திறக்க அனுமதி இல்லை.டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தும் முறையை மக்களுக்கு ஊக்குவிக்க வேண்டும். உணவு விநியோக ஊழியர்கள் உணவு பார்சலை நேரடியாக மக்களுக்கு கொடுக்கக்கூடாது.
ஆன்மீக ஆறுதலுக்காக வழிபாட்டுத் தலங்கள் ஏராளமான மக்களால் அடிக்கடி வருகின்றன.கோரோனா நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்க,அந்த இடங்களில் தேவையான சமூக தூர மற்றும் பிற தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுவது முக்கியம்.வழிபாட்டு தளங்களில் சிலைகள் போன்றவற்றைத் தொடக்கூடாது என்று பக்தர்களுக்கு எஸ்ஓபி அறிவுறுத்தல் .ஒருவரின் சொந்த வாகனத்திற்குள் காலணிகள் கழற்ற வேண்டும். புனித நீரைத் தெளித்தல், பிரசாதங்கள் மத இடத்திற்குள் அனுமதிக்கப்படாது
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…