உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள உன்னாவ் பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண் சென்றாண்டு ஒரு கும்பலால் பாலியல் பலகாரம் செய்யப்பட்டார். அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நால்வரும் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் இருந்து வந்தனர்.
இந்நிலையில் அந்த வழக்கு தொடர்பான விசாரணை ராய் பரோலி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதற்காக சம்பவத்தன்று நீதிமன்றம் நோக்கி பாதிக்கப்பட்ட பெண் சென்று கொண்டிருக்கும் போது, கவுரா எனும் திருப்பத்தில் ஒரு கும்பல் வழிமறித்து அப்பெண்ணை கடுமையாக தாக்கி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்தனர்.
இக்கோர சம்பவத்தில் உடம்பில் 90 சதவீத தீக்காயங்களுடன் அப்பெண் சுமார் 1 கிமீ தூரம் ஓடி அருகில் இருந்த கிராமத்தில் உதவி கேட்டுள்ளார். அங்குள்ளவர்கள் போலீசிற்கு தகவல் கூறி போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் அப்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அப்பெண்ணிற்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஹரி ஷங்கர், திரிவேதி, ராம் கிஷோர் திரிவேதி, உமேஷ் பாஜ்பாய் , ஷிவம் திரிவேதி, ஷுபம் திரிவேதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் ஷிவம் திரிபாதி , ஷுபம் திரிபாதி ஆகிய இருவரும் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கும்பலில் இருந்தவர்கள் என பாதிக்கப்பட்ட பெண்ணே போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…
ஐரோப்பா : உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…