90 % தீக்காயங்களுடன் 1 கிமீ தூரம் ஓடி உதவி கேட்ட பெண்! கற்பழித்தவர்களே தீ வைத்த கொடூரம்!

Published by
மணிகண்டன்

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள உன்னாவ் பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண் சென்றாண்டு ஒரு கும்பலால் பாலியல் பலகாரம் செய்யப்பட்டார். அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நால்வரும் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் இருந்து வந்தனர்.

இந்நிலையில் அந்த வழக்கு தொடர்பான விசாரணை ராய் பரோலி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதற்காக சம்பவத்தன்று நீதிமன்றம் நோக்கி பாதிக்கப்பட்ட பெண் சென்று கொண்டிருக்கும் போது, கவுரா எனும் திருப்பத்தில் ஒரு கும்பல் வழிமறித்து அப்பெண்ணை கடுமையாக தாக்கி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்தனர்.

இக்கோர சம்பவத்தில் உடம்பில் 90 சதவீத தீக்காயங்களுடன் அப்பெண் சுமார் 1 கிமீ தூரம் ஓடி அருகில் இருந்த கிராமத்தில் உதவி கேட்டுள்ளார். அங்குள்ளவர்கள் போலீசிற்கு தகவல் கூறி போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் அப்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அப்பெண்ணிற்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஹரி ஷங்கர், திரிவேதி, ராம் கிஷோர் திரிவேதி, உமேஷ் பாஜ்பாய் , ஷிவம் திரிவேதி, ஷுபம் திரிவேதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் ஷிவம் திரிபாதி , ஷுபம் திரிபாதி ஆகிய இருவரும் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கும்பலில் இருந்தவர்கள் என பாதிக்கப்பட்ட பெண்ணே போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

8 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

9 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

9 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

10 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

10 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

12 hours ago