இன்று வருகிறார் அமெரிக்க அதிபர்.! வரலாறு காணாத பாதுகாப்பு.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகையையொட்டி அகமதாபாத், ஆக்ரா மற்றும் டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 2 நாள் பயணமாக இன்று நண்பகல் இந்தியா வருகிறார். இவருடன் சேர்ந்து மனைவி மெலனியா, மகள் இவாங்கா, மருமகன் ஜாரட் குஸ்னர் மற்றும் அதிகாரிகள் பலர் நேரடியாக அகமதாபாத் விமான நிலையத்துக்கு வருகிறார்கள். அங்கு பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். காரில் செல்லும் டிரம்புக்கு வழிநெடுக லட்சகணக்கான மக்களும், கலைஞர்களும் வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்பின் மைதானத்துக்கு செல்லும் டிரம்பும், மோடியும் அங்கு வந்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்களிடையே உரை நிகழ்த்தவுள்ளனர்.

இதையடுத்து நிகழ்ச்சி முடிந்ததும் அகமதாபாத்தில் இருந்து புறப்பட்டு ஆக்ராவிலுள்ள தாஜ்மகாலுக்கு சென்று சுற்றி பார்த்துவிட்டு டெல்லி புறப்படுகின்றனர். பின்னர் அங்கிருந்து டெல்லிக்கு இரவு வந்தடையும் டிரம்ப் உள்ளிட்டோர் சானக்கியாபுரி மெளரியா ஹோட்டலில் தங்குகின்றனர். பின்னர் மறுநாள் காலை குடியரசுத் தலைவர் மாளிகையில் டிரம்புக்கும், அவரது மனைவி மெலனியாவுக்கும் அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. தொடர்ந்து ராஜ்காட்டிலுள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்கு சென்று டிரம்ப் மரியாதை செலுத்த உள்ளனர். இது முடிந்ததும் ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி- டிரம்ப் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தையும், பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பும் நடைபெற இருக்கிறது.

இதைத்தொடர்ந்து அமெரிக்க தூதரத்துக்கு சென்று அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் டிரம்ப், இரவு குடியரசுத் தலைவர் மாளிகையில் அளிக்கப்படும் விருந்தில் கலந்து கொண்டுவிட்டு அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். டிரம்ப் வருகையையொட்டி, அகமதாபாத், ஆக்ரா மற்றும் டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே  பாகுபலி படத்தில் சண்டை காட்சியில் தனது முகத்தை மார்பிங் செய்து பதிவிடப்பட்ட வீடியோவை ட்ரம்ப் ரிட்வீட் செய்து, இந்தியாவில் தனது சிறந்த நண்பர்களுடன் நேரம் செலவிடுவதை எதிர்நோக்கி காத்திருப்பதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…

11 hours ago

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.., 3வது பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்திய ஆர்ச்சர்.!

லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…

11 hours ago

3வது டெஸ்ட்: பும்ரா மீண்டும் அபாரம்.., இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட்.!

லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…

11 hours ago

யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…

12 hours ago

புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!

பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…

12 hours ago

பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!

திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…

13 hours ago