தடுப்பூசி கொள்முதல் விவரங்களை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் -உச்சநீதிமன்றம் உத்தரவு..!

Published by
Edison

தடுப்பூசி கொள்முதல் விவரங்களை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது தீவிரமாகப் பரவும் நிலையில்,கொரோனா பரவலைக் கட்டுபடுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.அதன்படி,கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

முன்னதாக,தடுப்பூசி போடுவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது.ஆனால்,தற்போது தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.இதன்காரணமாக,தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது.

மேலும்,மத்திய அரசிடம் இருந்து போதுமான தடுப்பூசிகள் மாநில அரசுகளுக்கு வரவில்லை என்றும் சம்மந்தப்பட்ட மாநில முதல்வர்கள்,மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து,18 வயது முதல் 44 வயது உள்ளவர்களுக்கு தடுப்பூசிகள் போடுவதில் மத்திய அரசின் கொள்கை தன்னிச்சையானது மற்றும் நியாயமற்றது எனவும்,தடுப்பூசி கொள்முதல் மற்றும் விநியோகத்தில் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி கொண்டிருந்தது.

இந்நிலையில்,கோவிஷீல்டு,கோவாக்சின்,ஸ்புட்னிக் ஆகிய தடுப்பூசிகளை கொள்முதல் செய்தது தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதாவது,தடுப்பூசி கொள்முதல் ஆணை பிறப்பிக்கப்பட்ட தேதி முதல்,தற்போது வரை ஒவ்வொரு தேதியிலும் எவ்வளவு தடுப்பூசி கொள்முதல் செய்யப்பட்டது என்றும் ,

மேலும்,இதுவரை மத்திய அரசுக்கு எந்தெந்த தேதிகளில் தடுப்பூசி வந்து சேர்ந்தது என்றும் தெரிவிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விபரங்களை,டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் பிரமாண பத்திரம் மூலம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம்,மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Published by
Edison

Recent Posts

காவல் மரண வழக்குகளின் தற்போதைய நிலை என்ன? த.வெ.க தலைவர் விஜய் கேள்வி!

காவல் மரண வழக்குகளின் தற்போதைய நிலை என்ன? த.வெ.க தலைவர் விஜய் கேள்வி!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…

49 minutes ago

தெலங்கானா ரசாயன தொழிற்சாலை தீ விபத்து : பலி எண்ணிக்கை 37 -ஆக அதிகரிப்பு!

ஹைதராபாத்: தெலங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள பசாமைலாரம் தொழிற்பேட்டையில் சிகாச்சி கெமிக்கல்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலையில் 2025 ஜூன்…

1 hour ago

காசா கடற்கரை உணவகத்தின் மீது இஸ்ரேலிய விமானப்படை வான்வழி தாக்குதல்…22 பேர் பலி!

காசா: இஸ்ரேலிய விமானப்படை, காசாவின் மேற்குப் பகுதியில் உள்ள அல்-பாகா கடற்கரை உணவகத்தின் மீது 2025 ஜூன் 30 அன்று…

2 hours ago

திருப்புவனம் : அஜித்குமாரின் உடலில் 18 காயங்கள் – பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…

2 hours ago

இங்கிலாந்தை வீழ்த்த கெவின் பீட்டர்சன் கொடுத்த டிப்ஸ்…உண்மையை உளறிய குல்தீப் யாதவ்!

பர்மிங்ஹாம்: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கு பயிற்சியாளர்…

3 hours ago

குறைந்தது வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்!

டெல்லி: எண்ணெய் நிறுவனங்கள், வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலையை ரூ.58.50 குறைத்து, 2025 ஜூலை 1 முதல் அமலுக்கு…

3 hours ago