போலீசாரை சுட்டு கொன்ற விகாஷ் துபே.! கண்காணிப்பை தீவிரப்படுத்திய காவல்துறை.!

Published by
Ragi

கான்பூரில் ரவுடியாக வலம் வரும் விகாஷ் துபேவை கண்டுபிடிக்க காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் உள்ள கான்பூரில் பிரபல ரவுடியாக வலம் வருபவர் விகாஷ் துபே. இவர் மீது ஏகப்பட்ட கொலை உட்பட கொலை முயற்சி, கொலை வழக்குகள் என 60க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை பிடிக்க முயன்ற 8 போலீசாரை சுட்டு கொன்றுள்ளது விட்டு தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய தினம் அவுரியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஃபோர்ட் எகோஸ்போர்ட்   கார் ஒன்று கண்டறியப்பட்டது. விகாஷ் துபேயின் பெயரில் இருந்த அந்த கார் வழியாக தப்பி சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனையடுத்து நேபாள நாட்டுடான உத்திரப் பிரதேச எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

மேலும் விகாஷ் துபே, அவுரியா தேசிய நெடுஞ்சாலை வழியாக மத்திய பிரதேசத்திற்கு தப்பி செல்ல வாய்ப்பு உள்ளதாகவும், அல்லது பிந்த்-மொரேனா வழியாக ராஜஸ்தானிற்கு சென்றிருக்க கூடும் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து குவாலியர் மற்றும் பிந்த் ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு தீவிர படுத்தியதோடு, சந்தேகமற்ற நபர்களையும் , வாகனங்களையும் சோதனை செய்தும் வருகின்றனர். அது மட்டுமின்றி உத்திரப் பிரதேசம் மற்றும் நேபாள எல்லையில் விகாஷ் துபேயின் புகைப்படத்தையும் சுவரொட்டியையும் ஒட்டியுள்ளனர்.மேலும் காரை போலீசாரை திசை திருப்ப விட்டு சென்றிருக்கலாம் என்றும் தடவவியல் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதனையடுத்து விட்டு சென்ற காரிலிருந்து ரத்த கறையுடன் கூடிய கைக்குட்டை, மூன்று அடையாள அட்டைகள், பர்ஸ், எலைட் லக்னோ பள்ளியின் ஐடி கார்டு, விலை மதிப்புடைய காலணி ஆகியவை கைப்பற்றப்பட்டு, அதிலுள்ள கைரேகைகளை தடவவியல் துறை நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், கார் ஆவுரியா – திபியாபூர் நெடுஞ்சாலை அருகே கண்டறியப்பட்டதாகவும், காரின் ஆவணங்களை சோதனை செய்த போது லக்னோவில் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. அந்த கேங்க்ஸ்டர் குறித்து உள்ளூர் மக்களிடையே விசாரணை நடத்தி வருவதாகவும், சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள டவரை வைத்து செல்போன் எண்களை ஆய்வு செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.

Published by
Ragi

Recent Posts

சென்னையில் ரயில் மோதி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.!

சென்னையில் ரயில் மோதி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.!

சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர்  செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…

38 minutes ago

கஷ்டமாக தான் இருக்கு ஆனா விலகுகிறேன்! டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த விராட் கோலி!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…

59 minutes ago

ரஃபேல் போர் விமானத்தை பாகிஸ்தான் வீழ்த்தியதா? – நடந்தது என்ன? விமானப்படை பதில்.!

டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…

60 minutes ago

திடீரென மயக்கம் போட்ட விஷால்…இப்போது உடல் நிலை எப்படி இருக்கு?

சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…

1 hour ago

சித்திரைத் திருவிழா: உயிரிழப்புக்கு நிவாரணம் வழங்கப்படும் – சேகர்பாபு.!

மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…

2 hours ago

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…

3 hours ago