MGNREGS [File Image]
NREGS : நாடு முழுதுவம் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள கிராமப்புறங்களில் உள்ள வேலைவாய்ப்பற்ற மக்களுக்கு பயன்படும் வகையில் அவர்களுக்கு உடல்உழைப்பு வேலை 100 நாட்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் நீர்நிலைகள் தூர்வாருவது, மற்ற ஊரக மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வது ஆகியவை மேற்கொள்ளப்படும். இதற்கான ஊதியம் தினசரி வகையில் வழங்கப்படும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் அந்தந்த மாநில நிதிநிலை கருத்தில் கொண்டு ஒவ்வொரு விதமாக ஊதியம் மாறுபடும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 294 ரூபாய் தினசரி ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது.
இப்படியான சூழலில், தற்போது 100 நாள் ஊரக வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தினசரி ஊதியத்தை அதிகரித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வழங்கப்படும் தினசரி ஊதியம் 294 ரூபாயில் இருந்து 319 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பு வந்துள்ளது.
மக்களவை தேர்தல் தேதி அறிவித்து, தேர்தல் விதிகள் அமலில் இருக்கும் சமயத்தில் மத்திய அரசு மக்களை கவரும் வகையில் புதிய திட்டங்களை , அறிவிப்புகளை அறிவிக்க கூடாது என்பது விதி. ஆனால், ஏற்கனவே செயல்படுத்தப்படும் திட்டத்தினை தேர்தல் சமயத்தில் மேம்படுத்த வேண்டும் என்றால் தேர்தல் ஆணையம் அனுமதி பெற வேண்டும். தற்போது மத்தியில் இருக்கும் பாஜக அரசு தேர்தல் ஆணையம் அனுமதி பெற்று இந்த அறிவிப்பை வெளியிட்டதாக கூறப்படுகிறது .
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…