கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து பணப்பரிவர்த்தனை செய்ய வேண்டாம் என்று எஸ்பிஐ வங்கி ட்வீட் செய்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவலாக பரவி வருகின்ற நிலையில், ஆன்லைன் பரிவர்த்தனைகள் தற்போது அதிகரித்துள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்தி சிலர் மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம், அதாவது கியூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம், பண மோசடிகள் நடப்பது குறித்து வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து பணப்பரிவர்த்தனை செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதை தவிர்த்தாலே ஆன்லைன் மோசடிகளுக்கு ஆளாகாமல் அதிலிருந்து நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். நீங்கள் கியூ ஆர் கோட் குறியீட்டை ஸ்கேன் செய்வதால் உங்களுக்கு பணம் கிடைக்காது. உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்ற செய்தி மட்டுமே கிடைக்கும்.
எனவே முடிந்தவரை மற்றவர்கள் உங்களுக்கு பகிர்ந்துகொள்ளும் கியூஆர் கோட்டை ஸ்கேன் செய்யாமல் இருங்கள். இது குறித்து எச்சரிக்கையாய் இருங்கள் என எஸ்பிஐ வங்கி ட்வீட் செய்துள்ளது. இதுகுறித்து எஸ்பிஐ வங்கி ஒரு விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…