சரத் பவார்: நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனதால், கூட்டணி ஆட்சி அமையும் நிலை உருவாகியுள்ளது. இப்படியான சூழலில், மற்ற கட்சிகளை ஒன்றிணைக்க NDA மற்றும் I.N.D.I.A கூட்டணி கட்சியினர் முயற்சி செய்து வருகின்றனர்.
INDIA கூட்டணியில் பிரதான கட்சியாக செயல்பட்டு வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், நேற்று நிதிஷ் குமார் (ஐக்கிய ஜனதா தளம்) மற்றும் சந்திரபாபு நாயுடு (தெலுங்கு தேசம்) ஆகியோரிடம் I.N.D.I.A கூட்டணிக்கு ஆதரவளிக்க பேசியதாக செய்திகள் வெளியாகின.
இதனை இன்று சரத்பவார் மறுத்துள்ளார். இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடுவை நான் தொடர்பு கொண்டு பேசவில்லை. புதிய அரசு அமைப்பது பற்றி கூட்டத்தில் முடிவு எடுப்போம். இந்தியா கூட்டணி ஆட்சியமைக்க உள்ள அனைத்து வாய்ப்புகள் குறித்தும் இன்று ஆலோசிப்போம் என சரத் பவார் தெரிவித்துள்ளார்.
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…