மத்திய அரசு திட்டங்களை சரியான நேரத்தில் முடிப்பதாக பீகார் முதல்வர் நிதீஷ் குமார், பிரதமருக்கு உறுதி அளித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் குடிநீர் விநியோகத் திட்டங்கள், கழிவுநீர் மேலாண்மை திட்டங்கள் மற்றும் ஆற்றுப்படுகை மேம்பாட்டு திட்டம் என மொத்தம் ரூ.541 கோடி மதிப்பிலான 7 வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி நேற்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்நிலையில், மத்திய அரசு திட்டங்களை சரியான நேரத்தில் முடிப்பதாக பீகார் முதல்வர் நிதீஷ் குமார், பிரதமருக்கு உறுதி அளித்துள்ளார்.
மேலும், நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் மிஷன் (AMRUT) மற்றும் மாநிலத்தில் உள்ள பிற திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும் மத்திய அரசு திட்டங்களையும் இது துரிதப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார். பாட்னாவில் உள்ள பியூர் மற்றும் கர்மலிச்சக் ஆகிய இடங்களில் தலா ஒரு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை பிரதமர் திறந்து வைத்தார். இது நதி மாசுபடுவதைத் தடுக்க கங்கா நதியில் விடுவிப்பதற்கு முன்பு தண்ணீரை சுத்தப்படுத்தும்.
சாம்ரா மற்றும் சிவான் நகரத்திற்கான குடிநீர் விநியோகம் திட்டங்களையும் மோடி திறந்து வைத்தார், அங்கு AMRUT மிஷனின் கீழ் குடிநீர் வழங்களில் 81,000 பேர் பயனடைவார்கள் என்று முதல்வர் கூறியுள்ளார். இது தவிர, இரண்டு குடிநீர் விநியோகம் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய நிதீஷ் குமார், நங்காமி கங்கே திட்டத்தின் கீழ் கட்டப்படும் எஸ்.டி.பி.க்கள் குறிப்பாக கங்கை நதிகளை மாசுபடாமல் பாதுகாப்பது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…