நாடாளுமன்றத்தை பாதுகாக்க உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு தேசம் அஞ்சலி செலுத்துகிறது என்று பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கடந்த 2001-ம் ஆண்டு டெல்லி நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்த பயங்கரவாதிகள், துப்பாக்கிகள் மற்றும் குண்டுகளை கொண்டு பயங்கர தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் 8 பாதுகாப்புப் படையினர், ஒரு தோட்டக்காரர் என மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர். பின்னர் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 5 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலின் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்ட அப்சல் குரு கடந்த 2013-ம் ஆண்டு, பிப்ரவரி 9-ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார். இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இதே நாளில் நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், 2001-ல் இந்த நாளில் எங்கள் பாராளுமன்றத்தின் மீதான கோழைத்தனமான தாக்குதலை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம். பாராளுமன்றத்தை பாதுகாக்க உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு தேசம் அஞ்சலி செலுத்துகிறது. இந்தியா எப்போதும் அவர்களுக்கு நன்றியுடன் இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…