மேற்குவங்கம் நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் சேர்ந்த சுவேந்து அதிகாரி பேரவை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மூன்றாம் முறையாக ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலில் 77 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தின் முதல்வராக தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல்வர் பதவி வகித்து உள்ள மம்தா பானர்ஜி கடந்த புதன்கிழமை பதவி ஏற்றுக்கொண்டார். அன்றைய தினம் மம்தா பானர்ஜி மட்டுமே முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டார்.
புதிய அமைச்சர்களுக்கான பதவியேற்பு விழா நேற்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது .இதில் 19 இணையமச்சர் உள்பட 43 அமைச்சர்கள் பதவிப் பொறுப்பை ஏற்றுள்ளனர். இந்நிலையில், இந்த அமைச்சர்கள் பதவியேற்பு விழாவின் பொழுது மேற்கு வங்கத்தின் எதிர்க்கட்சித் தலைவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதாவது பாஜக மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சியாக வந்துள்ள நிலையில், நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றிபெற்ற பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி அவர்கள் பேரவை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…
ஹைதராபாத்: தெலங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள பசாமைலாரம் தொழிற்பேட்டையில் சிகாச்சி கெமிக்கல்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலையில் 2025 ஜூன்…
காசா: இஸ்ரேலிய விமானப்படை, காசாவின் மேற்குப் பகுதியில் உள்ள அல்-பாகா கடற்கரை உணவகத்தின் மீது 2025 ஜூன் 30 அன்று…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…
பர்மிங்ஹாம்: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கு பயிற்சியாளர்…
டெல்லி: எண்ணெய் நிறுவனங்கள், வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலையை ரூ.58.50 குறைத்து, 2025 ஜூலை 1 முதல் அமலுக்கு…