கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் மிரட்டி வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை 173 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் . மேலும் 4 பேர் இறந்துள்ளனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி வானொலி மூலமாக மக்களிடம் உரையாற்றினார்.அப்போது வரும் 22-ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். அத்தியாவசிய சேவைகளில் பணிபுரிவோர் தவிர மற்றவர்கள் யாரும் ஞாயிற்றுக்கிழமை வெளியே வரவேண்டாம் என மோடி அறிவுறுத்தியுள்ளார்.
22 ம் தேதி கொரோனா வைரஸுக்கு எதிராக சோதனை ஓட்டமாக இருக்கும். வருகின்ற 22-ம் தேதி மாலை 5 மணிக்கு வீட்டின் வாயிலில் இருந்து அனைவரும் கைதட்டியோ அல்லது மணியோசை எழுப்பியோ மருத்துவர்களுக்கும், சேவை பணிபுரிவோருக்கும் நன்றி தெரிவிக்கவேண்டும்.
நாட்டின் நன்மைக்காக வரும் 22ஆம் தேதி ஊரடங்கை நாம் பின்பற்றுவோம், இதனை அரசியல் கட்சிகள் மற்றும் சங்கங்கள் மக்களுக்கு எடுத்துச் செல்லவேண்டும். மேலும் போர்க்களங்களில் இரவு நேரங்களில் எப்படி இருக்கவேண்டுமோ அப்படி இருக்க வேண்டும் என கூறினார்.
டெல்லி : தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாக கர்நாடக பாஜக…
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…