சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 31க்குள் அறிவிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலைகளைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, ஜூலை 21க்குள் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அன்று ஈத் பண்டிகை என்பதால் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை.
ஜூலை 22 ஆம் தேதிக்குள் 12-ஆம் வகுப்பு முடிவுகளை பள்ளிகள் இறுதி செய்ய வேண்டும் என கல்வி வாரியம் பள்ளிகளுக்கு கூறியிருந்தது. ஆனால், தொடர்ந்து தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் நீடித்து வருகிறது. இதனால் 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்காக மாணவர்கள் காத்திருக்கும் நிலையில் ஏற்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு 2021 தேர்வு முடிவுக்காக லட்சக்கணக்கான மாணவர்கள் ஆவலுடன் காத்திருப்பதால், ஜூலை 31 சனிக்கிழமைக்குள் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என கூறப்படுகிறது. சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வு 2021 முடிவுகளை ஜூலை 31க்குள் அறிவிப்பதாக சிபிஎஸ்இ உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இருப்பினும், தேர்வு முடிவுகளை அறிவிப்பது தொடர்பாக சிபிஎஸ்இ இன்னும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இது அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் cbseresults.nic.in இல் நேரடி இணைப்பு மூலம் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், டிஜிலாக்கர், ஐவிஆர்எஸ், எஸ்எம்எஸ் மற்றும் உமாங் செயலி மூலம் மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை அறியலாம்.
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் CBSE 10, 12ஆம் வகுப்பு முடிவுகளை காணும் செயல்முறையை இங்கே காணலாம் : cbseresults.nic.in
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…