Categories: இந்தியா

கர்நாடக முதலமைச்சர் யார்? இன்றே இறுதி! கார்கேவுடன் டி.கே. சிவகுமார் சந்திப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

கர்நாடக முதலமைச்சர் யார் என்பதை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வரும் நிலையில், கார்கேவுடன் டி.கே. சிவகுமார் சந்திப்பு.

டெல்லியில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் சந்தித்துள்ளார். கர்நாடகாவில் யார் அடுத்த முதலமைச்சர் என சித்தராமையா, டி.கே. சிவகுமார் இடையே கடும் போட்டி நிலவும் நிலையில், இந்த சந்திப்பானது நடந்து வருகிறது. முதலமைச்சரை மல்லிகார்ஜுன கார்கே முடிவு செய்வார் என காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதுபோல எம்எல்ஏக்களிடம் கருத்து கேட்டு தலைமையிடம் சமர்பித்திருந்தது மேலிட பார்வையாளர் குழு. இந்த நிலையில், முதலமைச்சர் போட்டியில் உள்ள இரு தலைவர்களும் கார்கேவை சந்தித்து பேசும் நிலையில், முதல்வர் யார் என்பது இன்று இறுதியாக வாய்ப்பு உள்ளது. மல்லிகார்ஜுன கார்கேவை டி.கே. சிவகுமார் சந்தித்து பேசிய நிலையில், சித்தராமையாவும் சந்தித்து பேச உள்ளார்.

மேலும், கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார்? என்பது குறித்து அம்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே சிவக்குமாருடன், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே டெல்லியில் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபால் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு இவ்விவகாரம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

14 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

15 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

16 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

16 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

18 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

19 hours ago