யார் தடுத்தாலும் மேகதாதுவில் அணை காட்டுவோம் – கர்நாடக முதல்வர்!

Published by
Rebekal

சட்டம் தங்களுக்கு சாதகமாக இருப்பதால் யார் தடுத்தாலும் மேகதாதுவில் அணை காட்டுவோம் என கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.

மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசு ஒத்துழைப்பு தர வேண்டும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னதாக கடிதம் எழுதியிருந்தார். அதில் மேகதாது அணை கட்டுவது தமிழகத்தை பாதிக்காது எனவும், தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுக்கும் இதனால் பயன் உண்டு எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இதற்கு பதிலளித்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மாநிலங்களுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தும் உள்நோக்கத்தை பாராட்டுகிறேன். இருப்பினும் மேகதாது அணை காரணமாக தமிழகத்தின் விவசாய சமூகம் பாதிக்கப்படாது எனும் உங்கள் கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், எனவே மேகதாது திட்டத்தை கைவிட வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பதில் அளித்திருந்தார்.

மேலும், தமிழக முதல்வரை தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்களும் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த நிலையில், தற்போது இது குறித்து கூறியுள்ள கர்நாடக முதல்வர் எடியூரப்பா, யார் தடுத்தாலும் மேகதாதுவில் அணை கட்டுவோம் எனவும், சட்டம் தங்களுக்கு சாதகமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் தமிழக முதல்வருடன் இணைந்து இத்திட்டத்தை தொடங்கலாம் என தான் நினைத்ததாகவும், ஆனால் அவரிடமிருந்து சரியான பதில் கிடைக்கவில்லை எனவும் முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

1 hour ago

அமெரிக்காவுக்கு என்ன வேலை? போர் நிறுத்தியது தவறு…சுப்பிரமணியன் சுவாமி பேச்சு!

டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…

2 hours ago

இந்தியாவின் பாதுகாப்பை 10 செயற்கைக்கோள்கள் மூலம் 24×7 கண்காணிக்கிறோம் – இஸ்ரோ.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…

2 hours ago

தி.நகர் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து.., போராடும் தீயணைப்பு வீரர்கள்.!

சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…

2 hours ago

சென்னையில் ரயில் மோதி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.!

சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர்  செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…

3 hours ago

கஷ்டமாக தான் இருக்கு ஆனா விலகுகிறேன்! டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த விராட் கோலி!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…

4 hours ago