செங்கோல் விவகாரத்தில் பாரம்பரியம், கலாச்சாரத்தை காங்கிரஸ் வெறுப்பது ஏன்… அமித்ஷா கேள்வி.!

Published by
Muthu Kumar

காங்கிரஸ் கட்சி இந்திய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை ஏன் இவ்வளவு வெறுக்கிறது என அமித்ஷா கேள்வி.

வரும் மே 28 ஆம் தேதி புதிய பாராளுமன்ற கட்டிடம் திறந்து வைக்கப்பட இருக்கிறது, இதில் தமிழ்நாட்டிலிருந்து வழங்கப்பட்ட செங்கோல் இடம்பெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த செங்கோல் குறித்து தற்போது காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்த கருத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வியெழுப்பியுள்ளார்.

இது குறித்து அமித்ஷா தனது ட்விட்டரில், காங்கிரஸ் கட்சி ஏன் இந்திய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை வெறுக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்ததை அடையாளப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டிலிருந்து புனித சைவ மடத்தால் பண்டித நேருவுக்கு ஒரு புனிதமான செங்கோல் வழங்கப்பட்டது, ஆனால் அது வெறும் கைத்தடியாக அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது.

amitsha tweet [Image- Twitter/@Amitshah]

தற்போது காங்கிரஸ் மற்றொரு வெட்கக்கேடான செயலில் ஈடுபட்டுள்ளது, திருவாவடுதுறை ஆதீனம், ஒரு புனித சைவ மடம், இந்தியா சுதந்திரம் பெற்ற நேரத்தில் செங்கோலின் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துக்கூறியது. ஆனால் காங்கிரஸ் தற்போது ஆதீனத்தின் வரலாற்றை போலி என்கிறது. முதலில் காங்கிரஸ் அவர்களின் நடத்தையை சிந்தஹிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ், சுதந்திரம் அடைந்த சமயத்தில் ஆகஸ்ட் 1947 இல் நேருவுக்கு வழங்கப்பட்ட செங்கோல் விவகாரத்தில், மவுண்ட்பேட்டன், ராஜாஜி & நேரு ஆகியோர் இந்த செங்கோலை பிரிட்டிஷ் அதிகாரத்தை இந்தியாவுக்கு மாற்றியதற்கான அடையாளமாக விவரித்ததற்கு எந்தவித ஆவண ஆதாரங்கள் எதுவும் இல்லை.

இவை அனைத்தும் தற்போது தமிழகத்தில் தங்கள் அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். இந்த கருத்துகளுக்கு பதிலளிக்கும் விதமாக அமித்ஷா, காங்கிரஸ்-இன் செயலுக்கு கடுமையாக சாடியுள்ளார்.

Published by
Muthu Kumar

Recent Posts

“கப் தான் டார்கெட்”…பஞ்சாப்பை நொறுக்கி ஃபைனலுக்கு முன்னேறிய பெங்களூர்!

சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டி இன்று மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

8 hours ago

பஞ்சாப்பை பதறவிட்ட பெங்களூர்…இறுதிப்போட்டிக்கு செல்ல ஈஸி டார்கெட் !

சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டி இன்று மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

9 hours ago

கமல் மன்னிப்பு கேட்கலைனா தக் லைஃப் ரிலீஸ் ஆகாது – நரசிம்மலு கடும் எச்சரிக்கை!

கர்நாடகா : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 1-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக…

11 hours ago

இது தான் பிறந்தநாள் ஸ்பெஷல்! நார்வே செஸ் தொடரில் குகேஷுக்கு முதல் வெற்றி!

நோர்வேயில் : நார்வே செஸ் போட்டியில் இந்தியாவின் உலக சாம்பியன் டி. குகேஷ் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து…

11 hours ago

“அவர் இல்லாம விமானம் பறக்காது”… ஹஜ் பயணத்தை மேற்கொண்ட இளைஞருக்கு நடந்த அதிசயம்!

மக்கா : விமானத்தைத் தவறவிட்ட நபரை மீண்டும் விமானமே அழைத்து சென்ற அதிசிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. லிபியாவைச் சேர்ந்த அமீர்…

13 hours ago

ராமதாஸின் சரமாரி குற்றச்சாட்டு…நாளை கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் அன்புமணி!

சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஏற்கனவே பேசுபொருளாக இருந்த நிலையில், அதனை இன்னும் பெரிய அளவில்…

14 hours ago