கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் தலைமையிலான ஆட்சி நீடிக்க நான் தொடர்ந்து போராடுவேன் என்று முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார். மேலும், நான் ஏன் பதவி விலக வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 11 எம்.எல்.ஏ க்கள் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்தனர். அதனை தொடர்ந்து அமைச்சர்களும் தங்களை பதவியை ராஜினாமா செய்தனர். தற்போது ஆளும் அரசின் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி, கர்நாடக பாஜக ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியுள்ளது. மேலும், குமாரசாமி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பாஜக வினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று முதல்வர் குமாரசாமி அவர்கள், கூட்டணி அரசு நீடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது அதற்கு தேவையான நடவடிக்கைகளை செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார். எக்காரணம் கொண்டும் கர்நாடகாவில் எனது தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்படாது என்றும் கூறியுள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…