காந்தி திரைப்படம் வெளியாவதற்கு முன்னர் உலகம் மகாத்மாவை அறிந்திருக்கவில்லை.. பிரதமர் மோடி பேட்டி.!

Published by
மணிகண்டன்

மகாத்மா காந்தி: 1982ஆம் ஆண்டு ‘காந்தி’ திரைப்படம் வெளியாவதற்கு முன்னர் வரையில் மகாத்மா காந்தி பற்றி உலகம் அறிந்திருக்கவில்லை – பிரதமர் மோடி.

பிரதமர் நரேந்திர மோடி ஏபிபி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் மகாத்மா காந்தி பற்றியும், அவரை இந்திய தலைவர்கள் உலகளவில் பிரதிநிதித்துவப்படுத்த தவறிவிட்டனர் என்றும் கூறி அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளார்.

அவர் அந்த பேட்டியில் கூறுகையில், மகாத்மா காந்தி ஒரு சிறந்த மனிதர், சுதந்திரத்திற்கு பிந்தைய கடந்த 75 ஆண்டுகளில், ஓர் சிறந்த தலைவரை உலகம் அளவில் அங்கீரம் பெறவைத்திருக்க வேண்டியது நமது இந்திய அரசியல் தலைவர்களின் பொறுப்பாகும். ஆனால் கடந்த காலங்களில் காங்கிரஸ் தலைமையிலான முந்தைய அரசுகள் அதனை செய்ய தவறிவிட்டன.

மகாத்மா காந்தியின் வாழ்க்கை மற்றும் அவரது கொள்கைகள் சினிமா சித்தரிப்புகளால்தான் உலகளாவிய அளவில் குறிப்பிடத்தக்க அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா போன்ற தலைவர்களை போல மகாத்மா காந்தியை உலகம் முழுக்க அறிந்திருக்க இந்தியா சிறப்பாக உழைத்து இருக்க வேண்டும். இந்தியாவில் நிலவிய பல பிரச்சனைகளுக்கு மகாத்மா காந்தி ஓர் தீர்வாக இருந்துள்ளார்.

தயவுசெய்து மன்னிக்கவும். முதன்முறையாக 1982ஆம் ஆண்டு வெளியான மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான காந்தி திரைப்படம் படம் எடுக்கப்பட்ட பின்னர் தான் உலகம் மகாத்மா காந்தியை பற்றி நன்கு அறிந்து கொண்டது என அந்த பேட்டியில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

ரிச்சர்ட் அட்டன்பரோ இயக்கத்தில் பென் கிங்ஸ்லி நடிப்பில் 1982ஆம் ஆண்டு மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் காந்தி. இந்த திரைப்படம் அப்போது 8 ஆஸ்கர் விருதுகளை வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

Published by
மணிகண்டன்

Recent Posts

சொந்த மண்ணில் சென்னைக்கு சம்பவம் செய்த பஞ்சாப்! 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…

8 hours ago

பட்டையை கிளப்புமா ரெட்ரோ! முதல் நாளில் இவ்வளவு வசூல் செய்யுமா?

சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…

9 hours ago

சுற்றி சுற்றி அடித்த சுட்டி குழந்தை! பஞ்சாப் அணிக்கு சென்னை வைத்த டார்கெட்!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

10 hours ago

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு! முதல்வர் ஸ்டாலின் வைத்த கேள்விகள்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

11 hours ago

தமிழ்நாடு அரசு சாதிவாரி சர்வே எடுக்க வேண்டும்! பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

12 hours ago

வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

12 hours ago