முதல்வர்களுக்கு பாடம் கற்பிக்க நீங்கள் ஒன்றும் தலைமை ஆசிரியர் அல்ல என பிரதமர் மோடியை விமர்சித்த கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா.
இதுகுறித்து, கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பிரதமர் மோடி அவர்களே, எந்த நோக்கமும் இல்லாமல் நீங்கள் மீண்டும் மீண்டும் தொலைக்காட்சியில் தோன்றினால் வைரஸ் மறைந்துவிடாது என்றும் முதல்வர்களுக்கு பாடம் கற்பிக்க நீங்கள் ஒன்றும் தலைமை ஆசிரியர் அல்ல எனவும் விமர்சித்துள்ளார்.
மாநில அரசுகளின் கோரிக்கைகளை முதலில் நிறைவேற்றுவதன் மூலம் உங்கள் பொறுப்பை காட்டுங்கள் என தெரிவித்துள்ளார். நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா நோயாளிகள் ஆக்ஸிஜன் இல்லாமல் இறந்து கொண்டிருக்கிறார்கள். ஆக்ஸிஜனை வழங்க பிரதமர் மோடியிடம் மாநிலங்கள் கோருகையில் பதுக்கல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அவர் மாநிலங்களைக் கேட்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.
நம் நாட்டில் பற்றாக்குறை இருக்கும்போது ஏன் ஆக்ஸிஜன் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டியிருந்தது? என கேள்வி எழுப்பியுள்ளார். பெங்களூரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்பட்ட கொரோனா படுக்கைகள் 7621. அதில், 6124 படுக்கைகள் நிரம்பி வழிகிறது. மீதம் 1487 படுக்கைகள் உள்ள நிலையில், தினமும் 15,000 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என விளக்கியுள்ளார்.
மேலும், பெங்களூரில் 65% சாதாரண படுக்கைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அதிக வசதி படுக்கைகளில் 96% ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. 98% ஐ.சி.யூ படுக்கைகள் மற்றும் 97% வென்டிலேட்டர் படுக்கைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. புதிதாக பாதிக்கப்படும் நோயாளிகள் எங்கே செல்வார்கள், அவர்கள் என்ன செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், நிலைமை கைமீறி சென்றுவிட்டது என்று கர்நாடக முதல்வர் ஒப்புக் கொண்டார். ஆகையால், மக்களுக்கு தீர்வு தேவை என்றும் அத்தகைய திறமையற்ற முதல்வருடன் கொரோனா நெருக்கடியை பிரதமர் மோடி எவ்வாறு தீர்ப்பார்? என முன்னாள் முதல்வர் சித்தராமையா கடுமையாக சாடியுள்ளார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…