அரசுப் பள்ளிகளுக்கு ரூ.38.37 கோடியில் 50% மானியத் தொகை விடுவிப்பு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!

Default Image

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு ரூ.38.37 கோடியில் 50% மானியத் தொகையை பள்ளிக்கல்வித்துறை இன்று விடுவித்துள்ளது. 

கொரோனா பரவல் காரணமாக மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பல மாதங்களாக ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. எனினும்,தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்க உள்ளது. இதனால்,அனைத்து ஆசிரியர்களும், பணியாளர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும்,தமிழகத்தில் உள்ள 6,177 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கீழ் நடப்பு கல்வியாண்டுக்கு ரூ.38.37 கோடி மானியம் வழங்கப்படும்.

இந்நிலையில்,செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால்,அதன் முன்தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக,ரூ.38.37 கோடியில் 50% மானியத் தொகையை இன்று விடுவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MK STALIN - T N GOVT
CM MK Stalin
INDvsENG
Tiruchendur - Murugan Temple
vaibhav suryavanshi shubman gill
laura loomer donald trump