எதிர் வரும் காலத்தில் வரும் பருவமழை தண்ணீர் பஞ்சத்தை தீர்க்கும்-அமைச்சர் ஜெயக்குமார்

எதிர் வரும் காலத்தில் வரும் பருவமழை தண்ணீர் பஞ்சத்தை தீர்க்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது ஆலோசிக்கப்பட வேண்டிய ஒன்று . தமிழகத்தில் நீர் மேலாண்மை சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.
100% மழையில் 40% மழை தான் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. மீதமுள்ள60%மழை இல்லாத போது இதில் அரசியல் செய்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. வீராணம் உள்ளிட்ட திட்டங்களை ஜெயலலிதா கொண்டு வரவில்லை என்றால் இன்னும் பல இன்னல்களை சந்திக்க வேண்டியநிலை ஏற்பட்டிருக்கும் என்றும் எதிர் வரும் காலத்தில் வரும் பருவமழை தண்ணீர் பஞ்சத்தை தீர்க்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.தண்ணீர் பிரச்சனையை தீர்ப்பதற்கான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025